16.தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
அர்ச்சுனன்: மிகவும் ரகசியமான் அந்தத் தத்துவங்களைஅறிந்துகொள்ள தகுதி கொண்டவர் யார்?
கண்ணன்: இறையருளும் செல்வமுள்ள பக்தன் அந்தத் தகுதியை கொண்டவனாகிறான்.
இறைவன்( தேவன்) பரமாத்மா இறைவனின் அருட்செல்வம் நற்குணம் இதைத்தான் இறையருட்செல்வம் (சம்பத்) என்பர்.இதன் மூலமாக பரமாத்மாவை அடைய முடியும்.
அர்ச்சுனன்: கண்ணா இறையருட் செல்வங்கள் பெற்றவனின் ( இலட்சணங்கள்)என்ன?
பகவான்: அர்ச்சுனா!
1. என்னிடமே திட நம்பிக்கையுடன் ஈடுபட்டு அச்சமின்றி வாழுதல்.
2. அந்தக் கரணத்தில்( உள்மனதில்) என்னை அடைய வேண்டும் எனும் திடமான் தீவிர நிச்சயம் கொள்வது.
3. என்னை தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
4.சாத்வீக தானம் செய்வது.
5 ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
6 தன் கடமைகளை முறையாக செய்து வருதல்.
7.சாஸ்திரங்களின் தீர்ப்புகளை( சித்தாத்தங்களை) விழுமிய கருத்துகளாக கொன்டு சொந்த வாழ்வில் செயல்படுத்தல்.
8. தன் கடமைகளைச் செய்து வரும்போது ஏற்படும் இன்னல் இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்வது.
9. உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எளிமையாக வாழ்வது.
10. உடல்,உள்ளம் வாக்குகளால் எந்தப் பிராணிக்கும் சிறிதளவாகிலும்துன்பம் தராது இருத்தல்
11. கண்டதையும் , கேட்டதையும் , அறிந்ததையும் உள்ளபடியே இனிய சொற்களால் சொல்வது.
12. எவரிடமும் எதனிடமும் குரோதம் ( வெறுப்பேறிய வென்சினம்) கொள்ளாது இருத்தல் .எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்.
13. உலகியல் ஆசை அபிலாசைகளை துறப்பது.
14. அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால் எழும் கொந்தளிப்புகளை அடக்குவது
15.கோள் பேசாதிருத்தல்.
16. எல்லா உயிரினங்களிடத்திலும் இரக்கம் பரிவு கொண்டு பழகுதல்.
17. உலகியல் பொருட்களில் பேராசை கொள்ளாது இருத்தல்.
18. எந்நேரமும் மென்மையான இதயம் கொண்டிருத்தல்.
19. செய்யத்தகாததை செய்வதில் வெட்கப்படுதல்.
20 சபலசித்தம், அவசரப்படுதல் இரண்டும் இல்லாதிருத்தல்.
21. உடல், வாக்கு இரண்டிலும் செல்வாக்கும் பொலிவும் கொண்டிருத்தல்.
22. தண்டனை அளிக்கும் அதிகாரம் , திறமை இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
23. எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும் பொறுமையும் கொண்டிருத்தல்.
24. உடலை தூயதாக வைத்திருத்தல்.
25 பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
26. உயர்வு மனபன்மையும் செருக்கும் கொல்ளாது இருத்தல்.
பரதவம்சத்து வீரனே! இவையாவும் தெய்வீக சம்பத்து ( இறையருள் செல்வம்) பெற்ற மனிதனின் இலட்சணங்கள், இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்த தகுதி பெற்றவன்.
இந்த இடத்தில் ஓர் சந்தேகம் எழும்.மேற்கூறிய இலட்சணங்கள் கொண்ட மனிதன் தான் ஆன்டவனிடம் பக்தி செலுத்த தக்கவர்கள்.மற்றவர்கள் அல்லர்.தீய இயல்புகள் கொண்டவர்கள் பக்தி புரியக் கூடாதா?பக்தி புரியலாம்.தீயமனிதன் மன்ம்திருந்தி ஆண்டவனை வழிபட்டு மேன்மையை பெற முயன்றால் அவனுக்கு நற்பலன் கிட்டும்.அவன் விரைவிலேயே அறநெறி சீலராக மாறுகிறான்.திருந்திய மேம்பட்ட அந்த மனிதரிடமும் இறையருள் செல்வம் இடம் பெறுகிறது. பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 30.3
அர்ச்சுனன்: பகவானே! தெய்வீக சம்பத்துக்கு அருகதையற்றவன் எவன்?
கண்ணன்: அசுரத்தன்மையுள்ள செல்வத்தைக் கொண்டவன்.( அசு என்றால் உயிர் . உயிர் நிலைகளிலேயே பற்றுக்கொண்டு வாழ்பவர்கள்.அவைகளை விரும்புவர்கள்”அசுரர்” எனப்படுவர்.உடலைப்பேணி உடல் இன்பத்திற்கககவே வாழ்ந்தும்
வாழ விரும்பியும் இந்த உடலே நான் தான் என்று கருதுபவர் அசுரர்.நான் இறக்க மாட்டேன்.எப்போதும் வாழ்ந்து மகிழவேண்டும்.சுகபோகங்களை அநுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும்தான் அசுர சம்பத்து ( தீயசெல்வம்) எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவனின் அடையாளங்கள் எவை?
பகவான்: அர்ச்சுனா!
1. வெளிப்பகட்டுடன் செயற்கைப் பெருமையை காட்டிக் கொள்ளுதல்.
2.கர்வம் கொள்ளுதல் , பற்றுதல் கொண்டுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு செருக்குடன் பெருமைப்படுதல்.
3.செருக்கடைய வைக்கும் பொருட்களிலும் கருத்துக்களிலும் ஈடுபட்டு பெருமிதம் கொள்ளுதல்.
4. குரோதம் கொள்ளுதல்.
5.மனம், வாக்கு செயல்களில் கடுமையும் கொடுமையும் கொள்ளாதிருத்தல்.
6.நல்லது பொல்லாதது.உண்மை -பொய், கடமை -கடமையில்லாதது,செய்யத்தக்கது செய்யத்தகாததுமுதலியவற்றை பகுத்தறிந்து கொள்ளும் விவேகத்திற்கு மதிப்பு அளிக்காது இருத்தல்.
அர்ச்சுனா! இவைதான் அசுரசம்பத்தைப் பெற்ற மனிதருக்குள்ள அடையாளங்கள். இவர்கள் என்னிடம் பக்தி செலுத்த தகுதியற்றவர்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த இறையருட் செல்வத்திற்கும் அசுர இயல்பிற்கும் ஏற்படும் இயல்புகள் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! தெய்வீகச் செல்வம் பிறவிப் பெருந்தளைகளைப் போக்கி முத்தியெனும் வீடுவேறு அளிக்க வல்லது.அசுரசம்பத்து பந்தங்களை ஏற்படுத்தி ஜனன மரணச் சூழல்களில் சிக்க வைக்கிறது.எனவே இவற்றையிட்டு நீ கவலைபடாதே.நீ தெய்வீகச் செல்வத்தை பெற்றிருப்பவன்.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்து எப்படி பந்தங்களில் சிக்க வைக்கிறது?
கண்ணன்: அர்ச்சுனா! இந்த உலகில் இருவகைப் பிராணிகளின் படைப்பு நிகழ்கிறது.தெய்வீக சிருஷ்டி , அசுரத்தனமான சிருஷ்டிதெய்வீக சம்பத்து பற்றி விளக்கமாக சொன்னேன்.இப்போது அசுரசம்பத்து அசுர இயல்பான செல்வம் பற்றி விரிவாக கேட்டுக் கொள்.அசுரசம்பத்துள்ளவர் எதில் ஈடுபடவேண்டும்.எதிலிருந்து விலகியிருக்க வேன்டும் எனும் முறையை அறிந்து கொள்வதில்லை.அவர்களிடம்தூய நடத்தைகளும் இருப்பதில்லை.அவர்கள் சத்தியத்தை கடைப்பிடிப்பதில்லை.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொன்ட மனிதரிடம் ஆசார அநுஷ்டானங்கள் முதலியவை ஏன் இருப்பதில்லை? அவைகளை அவர்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?
கண்ணன்: அர்ச்சுனா! அவர்களுடைய நோக்கமே விபரீதமானது.அவர்களுடைய கருத்து இந்த உலகம் பொய்.இதிலுள்ள சாஸ்திரம்,அற்நெறி,தர்மம் எதுவும் உண்மையில்லை.இந்த உலகில் தர்மம்,அதர்மம்,புண்ணியம்,பாவம் முதலியவற்றிற்கு சிறிதும் மதிப்புக் கிடையாது.இந்த உலகை படைத்தவன் கடவுள் இல்லை.ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.அந்த இருபாலரின் சேர்க்கையால் இந்த மானிட சமூகமும் பிறந்தது.உலகம் உருவாகிற்று.ஆகையால் இந்த உலக உற்பத்திக்கு காரணம் காம இம்சைதான் .இதைதவிர வேறு எதுவும் எவருக்கும் காரணமில்லை.
அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! மேல்சொன்ன நாத்திக நோக்கை புகலடைந்த அவர்கள் தனது நித்திய அளிவற்ற சொருபமான ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை.அவர்களுடைய அறிவு கீழ்த்தரமாக உள்ளது.அவர்களுடைய செயல்கள் யாவும் அச்சமூட்டுபவை.உக்கிரமானவை..அவர்கள் இந்த உலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை , வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.
அர்ச்சுனன்: நாத்திக நோக்கைப் புகலடைந்த அசுரத்தன் மையர் என்ன செய்கிறார்கள்?
கண்ணன்: அவர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகிறார்கள். பகட்டு, செருக்கு, மமதைவெறி நிறைந்து செயல்படுகிறார்கள்.மிக மோசமான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.அவர்கள் மதிமயக்கம் காரணமாக பல தீய கருத்துகளைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர்குலைந்து வருகிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்களின் கருத்துக்கள் எத்தகையவை பகவானே?
கண்ணன்:அர்ச்சுனா அவர்கள் மரண காலம் வரையும் தொடரும் பெரும் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும் அடிமையாகிறார்கள்.பெளதீக பொருட்கள் சேகரிப்பதிலும் ,அவற்றைச் சேமிப்பதிலும் அவற்றால் அநுபவிப்பதிலுமே ஈடுபட்டிருப்பவர்கள்.உலகில் வாழ்வது , உண்டு உறங்கி சுகித்திருப்பதற்கே என்று தீர்மானிப்பத்ற்கு எல்லாமே இந்த சுயநல வாழ்க்கைதான் என்ற நிர்ணயத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்கள் எந்த நோக்கத்தை முன்னிட்டு செயல்படுகிறார்கள் பகவானே!
கண்ணன்: அர்ச்சுனா! ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் கொடூரமான அசுரத்தன்மை கொண்டவர்கள்.காமம் குரோதம்,மதம் மாச்சரியம் முதலிய தீய இயல்புகளை சரணடைகிறார்கள்.சுகபோகம் தான் வாழ்க்கை என்று நம்பி அநியாய வழிகளில் பொருளீட்டுகிறார்கள் இதற்காக பலமுறைகேடுகளையே மேற்கொள்கிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! அவர்களுடைய இலட்சிய ஆசைகள் எத்தகையவை?
கண்ணன்: அர்ச்சுனா! இன்று இவ்வள்வு பண்ம் சம்பாதித்துவிட்டோம்.இனி இதைக்கொண்டு எம் மனோரதங்களை நிறைவேற்றிக்கொள்வோம்.இவ்வள்வு செல்வம் இப்போது இருப்பது இந்தளவு செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்களுக்கு மேலும் என்னவெல்லாம் ஆசைகள் ஏற்படுகின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! அவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.அதாவது நாம் அந்த சத்துருவை அழித்துவிட்டோம்.இதேபோல் மற்ற எதிரிகளையும் அழிப்போம். நாம் சர்வ வல்லமை கொண்டவர்கள் .பல வெற்றிகளைக் கண்டவர்கள்.வலிமை மிகுந்தவர்கள்.சுகபோகிகள், செல்வந்தர்கள்,ஏராளமான மனிதர்கள் நம்மிடம் நம் தரப்பில் துணையிருக்கிறார்கள்.இங்கு நமக்கு நிகர் எவருமில்லை .எவரால் நம்மை எதிர்க்க முடியும்? நம் விருப்பப்படியே யக்ஞங்களைச் செய்வோம்.தான தர்மங்களைச் செய்வோம்.பிறகு ஆனந்தமாக கேளிக்கைகளில் மூழ்கி மகிழ்வோம்.இவ்வாறு எல்லாம் அறியாமையில் மதிமயங்கி மனேரதங்களை ( தனது தீவிர விருப்பங்களை)வளர்த்துக் கொள்கிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! இப்படியானவர்கள் இறந்த பிறகு எந்தக் கதியை அடைகிறார்கள்?
கண்ணன்: அர்ச்சுனா! பலதரப்பட்ட பிரமைகளிலும் பேதமைகளிலும் சிக்கிய நாத்தியர்கள் மோக வலைக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இதனாலேயே பொருள்களைச் சேகரிப்பதிலும் அநுபவிப்பதிலும் தீவிர விருப்புடன் ஈடுபட்டிருப்பதால் கொடிய பயங்கரமான நரகத்தில் விழுகிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! சுகபோகங்களில் விருப்புற்று வாழும் அந்த அசுர சொத்துக்காரர்களை அழிவுப் பாதையில் தள்ளும் இயல்புகள் தன்மைகள் எவை?
கண்ணன்: இவர்கள் தம்மையே மதிப்பு மிக்கவர்களாகவும் தாங்களே மேம்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள்.இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள்.செல்வமும் செல்வாக்கும் இருப்பதில் செருக்குள்ளவர்கள்.
அர்ச்சுனன்: இத்தகையவர்கள் சுபகாரியங்களையும் செய்யலாம் அல்லவா?
கண்ணன்: ஆம் அர்ச்சுனா. செய்யலாம் செய்கிறார்கள்.ஆனால் பகட்டாக போலித்தனமாக செய்கிறார்கள்.தம் பெருமையை பறை சாற்றிக் கொள்வதற்காக செய்கிறார்கள்.முறைப்படி ஒழுங்காக செய்வதில்லை.செய்வதாக பெயர்பெறவே விரும்புகிறார்கள்.
அர்ச்சுனன்: ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் பகவானே?
கண்ணன்: காரணம் இதுதான்.அர்ச்சுனா அகந்தை , வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வென்சினம் இவைகளை சரணடைந்து இவைகளால் ஈற்கப்படுகிறார்கள்.
அர்ச்சுனன்: அவர்களுடைய தன்மைகள் மேலும் எத்தகையது?
கண்ணன்: அசுரத்தன்மையுள்ல அந்தமனிதர்கள் தம்மிடமும் பிறரிடமும் அந்தர்யாமியாக உள்ள என்னை வெறுக்கிறார்கள்.என்னிடமும் என் பக்தர்களிடமுள்ள பண்புகளை குற்றமாக தீமையாகக் கருதுகிறார்கள்.
அர்ச்சுனன்: இத்தகைய அசுரத்தன்மையின் விளைவுகள் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! அந்த வெறுப்புற்ற , குரூரமான, கொடிய இயல்புகளைக் கொண்ட மனிதர்களை மிகவும் நீசர்கள் புனிதமற்றவர்கள் என்பதால் அவர்களை நாய்,கழுதை, புலி, காக்கை,ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மறுபடியும் இறக்கும்படி செய்து வருகிறேன்.
அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகிறது பகவானே?
கண்ணன்: குந்தியின் மைந்தனே! அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் அசுரப் பிறவிகளாக பிறக்கிறார்கள். பிறகு அதனிலும் மோசமான நரகங்களில் வீழ்கிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் அதமப் பிறவியிலும் அதமகதியான நரகத்திலும் உழல்கிறதிற்கு காரணம் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! தீவிர இச்சை , குரோதம், பேராசை இவை மூன்றுவகையான நரகங்களுக்கு வாசல்கள்.இவையே மனிதனை கீழ்நிலையில் தள்ளுபவை.ஆகையால் இம்மூன்று தீய இயல்புகளையும் விட்டு விட வேண்டும்.
அர்ச்சுனன்: காமம், குரோதம், உலோபம் இம் மூன்று இழி இயல்புகளையும் துறப்பதால் என்ன ஆகும்?
கண்ணன்: குந்தியின் மைந்தனே! எந்த மனிதன் நரகத்திற்கு இட்டுச் செல்லும் அம்மூன்று இயல்புகளையும் அண்டவிடாமல் , தன் ஆத்ம சேஷமத்திற்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகிறான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களைத் துறந்து விட்டு , தன் மேம்பாட்டுக்காக , பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருவதால் அவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகிறான்.
அர்ச்சுனன்: மேலான நற்கதி ( பரமகதி)எவருக்குக் கிட்டுவதில்லை பகவானே?
கண்ணன்: எந்த மனிதர்கள் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து விட்டு தம் மனம் போனபடி நடந்து கொள்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பச் செயலாற்றுகிறார்களோ , நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற் கொண்டும் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு நற்கதி கிட்டுவதில்லை.மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ( உள்ளத்தூய்மை) ஏற்படுவதில்லை. உண்மையான சுகம் கிட்டுவதில்லை.நற்கதி கிட்ட வாய்பே இல்லை.
அர்ச்சுனன்: நல்ல செயல், தீய செயல் இவைகளை எப்படி இனம் கண்டு கொள்வது?
கண்ணன்: செய்யத்தக்கது.தகாதது பற்றி சாஸ்திரம் தான் பிரமாணம். இதை அறிந்து கொண்டு சாஸ்திரம் விதித்துள்ள கடமைகளைச் செய்து வரவேண்டும்.சாஸ்திரத்தில் மறுக்கப்பட்டதை ஏற்கப்படாததை செய்யலாகாது.செய்யத்தக்கது.தகாதது எனும் காரியங்களுக்கும் சாஸ்திரப்பிரமாணம் தான் எடுத்துக்காட்டு.



