Home > கிருஷ்ணர், கீதையின்-சாரம், பொது, மகாபாரதம் > 18.முடிவு- துறவின் பக்குவம்

18.முடிவு- துறவின் பக்குவம்


அர்ச்சுனன்: எங்கும் பரந்துள்ள பெருமானே! நான் சன்னியாஸ யோகம் ( சாங்கிய யோகம்)தியாக யோகம்(கர்ம யோகம்) இரண்டின் தத்துவங்களையும் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.

பகவான்: அர்ச்சுனா! நான் சன்னியாசம் ,தியாகம் குறித்து சித்தாந்த வழிகளான தரிசனா சாரியர்களின் நால்வகை கருத்துக்களை விவரிக்கிறேன்.
1. பல வித்துவான்கள் காம்ய கருமங்களை ( தாம் விரும்பிச் செய்து வரும் காரியங்களை)துறப்பது சன்னியாசம் என்கிறார்கள்.
2. எல்லாக் காரியங்களுக்கும் உள்ள பயனைத் துறப்பது தியாகம் என்கிறார்கள் சிலர்.
3. சிலர் கருமங்களை ( காரியங்களை) குற்றமாகக் கருதிவிட்டு விடுவது தியாகம் என்கிறார்கள்.
4. வேறு சிலருடைய கருத்து வேள்வி( ஆசார அநுட்டானங்கள்)தானம் இவைகளைத் துறக்கலாகாது என்பது.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! இவை வேதாந்த வித்தகர்களின் கருத்துக்கள்- ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்து என்ன?

பகவான்:அர்ச்சுனா!பர வம்சத்தவரில் தலை சிறந்த வீரப் பெருமகனே!சன்னியாசம்,தியாகம் இவ்விரு தத்துவங்களுக்குள் முதலில் தியாகம் பற்றிய என்னுடைய கருத்தை அறிந்து கொள்.தியாகம் மூன்று வகப்படும் எனும் கருத்தைச் சொன்னேன்.வேள்வி,தானம்,தவம் மூன்று கருமங்களையும் துறந்துவிடக்கூடாது.செய்யாதிருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும்.காரணம் அவைகளில் ஒவ்வொன்றும் சான்றோர்களை,சிந்தனையாளர்களை பரிசுத்தபடுத்தவல்லது.

அர்ச்சுனன்: இந்த அளவிற்கு கருமங்களைச் செய்தால் போதுமா கண்ணா?
 பகவான்: பார்த்தனே! இப்போது விவரித்த மூன்று வகை வேள்வி தானம், தவம், ஆகிய கருமங்களையு இது தவிர சாஸ்திரத்தின் மூலம் செய்ய வேண்டிய கருமங்களையும் , பற்றுதலையும் , பயனையும் ஒழித்தே இக்கருமங்கள் யாவும்  செய்யப்பட வேன்டும் என்பது எனது நிச்சயமான , உத்தமமான கொள்கை.

அர்ச்சுனன்: பகவானே! மூன்று வகைப்பட்ட தியாகத்தின் சொரூபம் என்ன?

  பகவான்: அர்ச்சுனா!ஏற்படுத்தப்பட்ட கருமங்களைத் துறப்பது எவருக்கும் ஏற்புடையதல்ல.மதிமயக்கம் காரணமாக இவைகளைத் துறப்பது தாமஸ ( தீமைதரும்) தியாகம்( விட்டுவிடல்).

விதிக்கபட்ட கருமங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட கருமங்களுக்கும் என்ன வித்தியாசம்?சாஸ்திரங்கள் என்ன காரியங்களைச் செய்து வர வேண்டும் என்று விதித்திருக்கின்றனவோ, அவை விதிக்கப்பட்ட கருமங்கள்.எல்லா விதிக்கப்பட்ட காரியங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடிக்க முடியாது.

சாஸ்திரங்களில் வாரத்தின் எல்லாத் தினங்களுக்கும் ( திங்கள், செவ்வாய் முதலிய தினங்கள்,பிரதமை,துதியை முதலான திதிகள்)விரத அநுட்டானங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன ,ஒரு மனிதன் இவைகளை எல்லாம் கடைப்பிடிக்க முனைந்தால் அவன் உண்டு உறங்கி பணி செய்வது இயலாது போகும்.ஆகையால் எல்லா விரத அநுட்டானங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது.

மனிதர்களின் வருணம்( இனம்) பிருமச்சாரியம், கிருகஸ்தம் முதலான ஆசிரம ( வாழ்கை, நிலை, சூழ்நிலை,இடம், காலம் சர்ர்ந்தது)இவைகளுக்கேற்ப எந்தக் கடமைகள் அவசியமாகின்றனவோ, அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

உதாரணமாக பிராமணர், சஷ்த்திரியர், வைசியர் , சூத்திரர், இந்த நான்கு வருணத்தார்களில் எவர் எவருக்கு வாழ்க்கைக்கும் உடல் வளர்ச்சிக்கும் எத்தனை நியமங்கள் ( நெறி முறைகள்) ஒதுக்கப்பட்டுள்ளனவோ,அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

அர்ச்சுனன்:ராஜஸ தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: செய்ய வேண்டிய கருமங்களைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கருதி உடல் வருத்தம் ஏற்படுமே என்கிற பயத்தில் கடமைகளைக் கைவிடுவது ராஜஸதியாகம். இதனால் அமைதி கிட்டாமல் போகும்.

அர்ச்சுனன்:சாத்துவீக தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: ஏற்படுத்தப்பட்ட ஏற்கப்பட்ட கருமங்களைச் செய்வது மனிதனின் அவசியமான கடமை என்கிற உணர்வுடன் பயன் விரும்பும் சுயநல நோக்கமில்லாமல் அக்கருமங்களைச் செய்து வருவது சாத்வீகத் தியாகம்.

அர்ச்சுனன்: தியாகம் செய்யும் மனிதன் எப்படிப்பட்டவர்?

பகவான்: அர்ச்சுனா! அவன் சுயநலம் கொண்டதும் மறுக்கப்பட்டதுமான கருமங்களைக் கை விடுகிறான் .ஆனால் வெறுப்போடு ஒதுக்குவதில்லை.சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையாகிய ( செய்யவேண்டிய) காரியங்களைச் செய்கிறான்.அதில் ஆசை பாசம் வைப்பதில்லை.இத்தகைய அறிவாளியான தியாகி எவ்வித ஐயப்பாடும் தயக்கமும் இல்லாமல் தன் நெறிநிலையில்  திடமாக வாழ்கிறான். செயல்படுகிறான்.

அர்ச்சுனன்: கருமங்களைச் செய்வதில் ஆசாபாசம் கூடாது, செய்யாமல் விட்டுவது வெறுப்பினால் அல்ல. இவ்வளவு தொல்லையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? கருமமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன?

பகவான்: அர்ச்சுனா! உடல், உருவம்  கொண்ட மனிதனால் கருமங்களைத் தானாக துறப்பது இயலாது.கருமங்களால் ஏற்படும் துயரங்களைத் துறக்கலாம்.அதாவது பலன்களை எதிர்பார்த்துக் கருமங்களைச் செய்யும் மனப்போக்கை மாற்றிக் கொள்ளலாம் கரும பலன்களைத் துறக்கும் மனிதன் தியாகி.

அர்ச்சுனன்: கருமபலன்கள் எத்தனை வகைப்படும்?

பகவான்: கருமபலன்கள் மூன்று வகைப்படும்
1. இஷ்டம்- அதாவது எந்தச் சூழ்நிலையை மனிதன் விரும்புகிறானோ அது
2.அநிஷ்டம் – எந்தச் சூழ்நிலையை விருப்பமில்லையோ அது
3. மிசிரம்-(இரண்டும் கலந்தது)-எதில் சில பகுதிகள் விரும்பதக்கதும் சில பகுதிகள் விரும்பத்தாகாதுமாக உள்ளதோ அத்தகையது.இம்மூன்று வகை கரும பலன்களும் பயன் கருதி கருமங்களை செய்பவர்களை பின் தொடரும் .இறந்த பிறகும் தொடரும் .பயன்பற்றி ஆசாபாசம் கொல்ளாதவர்களுக்கு கரும பயன்களின் பாதிப்பு இராது.

அர்ச்சுனன்: பகவானே! மூன்றுவகை பயன்களைக் கொண்ட கருமம் ஏற்பட எது காரணமாக அமைகின்றது?
பகவான்: அர்ச்சுனா! கருமங்களை அழிவுக்குட்பட்டவை என்று கூறும் சாங்கிய சித்தாத்தங்களில் எல்லா கருமங்களிற்கும் பயனளிக்கும் நிலைக்கு 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

அர்ச்சுனன்: பகவானே! அந்த 5 காரணங்கள் எவை?


பகவான்: அர்ச்சுனா! சரீரம், செய்பவன், பலவகை கருவிகள்,பலவகை செயல்கள் வழிவந்த தொடர்பு அனுபவம் இவ் ஐந்தும் காரணங்கள்.மனத்தாலும் சாஸ்திர சம்மதமான சாஸ்திர விருத்தமான செயல்களை ஆரம்பிக்கிறான்.இதற்கு அவ் ஐந்து காரணங்களும் தூண்டுதல் ஆகும்.

அர்ச்சுனன்:  பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்: கருமங்கள் செய்யப்படுவதற்கு ஏற்படுவற்கும் ஐந்துகாரணங்களை கூறுவதின் நோக்கம் அல்லது கருத்து என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! கருமம்( செயல்) உடல் வாக்கு உள்ளங்களால் ஏற்படுவது.ஆத்மாவால் செய்பவன் தன்மையில்லை.ஆனால் எவன் கருமங்களைச் செய்வது ஆத்மா என்று கூறுகிறானோ அவன் மதிகெட்டவன்.உண்மையை அறியாதவன்.அவனுடைய புத்தி சுத்தமானதல்ல.

அர்ச்சுனன்:  பகவானே! ஆத்மாவை செயல்புரிபவன் ( கர்தா) இல்லையென்று கருதுவதால் என்ன ஆகிறது?

பகவான்: அர்ச்சுனா! என்னுடைய உள்ளத்தில் நான் தான் செய்கிறேன்.எனும் செருக்கு இல்லையோ, எவருடைய புத்தி கரும பலன்களில் நாட்டம் கொள்வதில்லையோ,கரும பலன்களை அனுபவிக்க முயல்வதில்லையோ, அவன் எதைச் செய்தாலும் அதன் பந்தத்தில் சிக்குவதில்லை.எல்லா உயிரினங்களையும் அவன் கொன்றாலும் அவன் கொலையாளி இல்லை.அதன் விளைவோ,பாதிப்போ அவனை கட்டுபடுத்துவதுமில்லைஅவன் பாதிக்கப்படுவதில்லை.

அர்ச்சுனன்:  பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்:பகவானே! கருமங்களின் தூண்டுதல் ,சேகரித்தல், இவ்விரண்டிலும்  முக்கியமானது எது? அவைகளின் முக்கிய பேதங்கள் எவை?
பகவான்:அர்ச்சுனா! குணங்களின் ( இயல்புகள்) தொடர்பால் ஒவ்வொரு பொருளிலும் ஏற்படும் வெவ்வேறு பேதங்களை( வித்தியாசங்களை)குறிப்பிடும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது இதுதன் அதாவது குணங்களிற்கு ஏற்ப ஞான்ம்,கர்மம்,கர்த்தா( செய்பவன்)இம்மூன்று முக்கிய பேதங்கள் ஏற்படுகின்றன.இவை பற்றியும் அர்ச்சுனா நீ நன்கு தெரிந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! ஞானத்திற்கு உள்ள மூன்று பிரிவுகளில் சாத்வீக ஞானம் எது?

பகவான்: அர்ச்சுனா!சித்தி பெற முயலும் சாதகர்( பயிற்சியாளர்)எந்த மெய்யறிவால்(ஞானம்) எல்லா பிரிவுகளும் கொன்ட பிராணிகளிடத்தில் பிரிவு பேதங்களை ( வித்தியாசங்களை) காணாமல் ஒரே நித்திய நிலையை காண்கிறாரோ அவருடைய மெய்யறிவுதான் சாத்வீக ஞானம்.

அர்ச்சுனன்: பகவானே! இராட்சத ஞானம் எது?


பகவான்:  எப்படிப்பட்ட ஞானத்தால் பகுத்தறிவு உள்ள மனிதன் பல பல பிரிவுகள், வித்தியாசங்கள் கொண்ட பிராணிகளிடம் வெவ்வேறான தன்மைகளை காண்கிறார்களோ,உணர்கிறானோ அதுதான் இடாட்சத ஞானம்.
அர்ச்சுனன்: கண்ணா ! தாமஸ ஞானம் எது?
பகவான்:  அர்ச்சுனா! பிறந்து அழியும் சரீரத்தையே பூரண தத்துவமான ஆத்மா என்று கருதி ஆசாபாசம் கொண்டிருப்பது.பகுத்தறிவிற்கு பொருந்தாது.அது தத்துவ ஞானம் அற்றது.இழிவானது.தாமஸ ஞானம் எனப்படும்.

அர்ச்சுனன்: கண்ணா ! மூன்றுவகை கருமங்களில் சாத்வீக கருமம் எது?

பகவான்: எந்த ஏற்படுத்தப்பட்ட கருமங்கள் பயன் சார்ந்த ஆசை பாசம் இல்லாத மனிதனால் விருப்பு, வெறுப்பு, செருக்கு ஏதும் இல்லாமல் செய்யப்படுகிறதோ அவை சாத்வீகமானவை.

அர்ச்சுனன்: இராட்சத கர்மம் எது கண்ணா?

பகவான்: எந்தக் கருமம் அனுபவிக்கும் ஆர்வம் கொண்ட மனிதனால் செருக்கும் , முனைப்புமாக செய்யப்படுகிறதோ அது இராட்சத கர்மம்.

அர்ச்சுனன்: தாமஸ கர்மம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தக் காரியம் விளைவு.நட்டம், கேடு,வன்மைச்செயல்,தன் திறமை ஆகியவைகளை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக மோகத்துடன் ( ஆவலுடன்)ஆரம்பிக்கபடுகிறதோ அது தாமஸ கர்மம்.

அர்ச்சுனன்: கண்ணா! மூன்றுவகை கர்த்தாக்களில் ( செய்பவர்) சாத்வீக கர்த்தா எவர்?

பகவான்: அர்ச்சுனா எவர் செய்யும் கருமத்தில் சுயநல ஈடுபாடு இல்லாமல் செருக்கு இல்லாமல் பொறுமையும் உற்சாகமும் கொண்டு வெற்றி தோல்விகளில் ( இலாப நஷ்டங்களில்)சமநிலையோடு ( மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாமல்) இருந்து வருகிறாரோ அவர்தான் சாத்வீக கர்த்தர்.

அர்ச்சுனன்:இராட்சத கர்த்தா எத்தகையவர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவை ஆசை பாசம் கொண்டவராக செய்வினைப் பயனில் நாட்டம் உள்ளவராக, வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவராக தூய்மை இல்லாதவராக, மகிழ்ச்சி துயரங்களிற்கு அடிமைப்பட்டவராக இருக்கிறாரோ அவர் தான் இராட்சத கர்த்தர்.

அர்ச்சுனன்: தாமச கர்த்தா என்பவர் எப்படி இருப்பர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவன் கவனக்குறைவாகவும், செய்யத்தக்கது, தகாதது எனும் விவேகம் இல்லாமலும் இருக்கிறானோ,கல்வி கேள்விகளில் ஈடுபடாமல் இருக்கிறானோ, திமிரும் வீம்பும் வீண்பிடிவாதமும் கொண்டிருக்கிறானோ, செய்நன்றி இல்லாதிருக்கிறானோ,சோம்பேறியோ,துயரத்தில் ஆழ்ந்திருகிறானோ, செயல் புரிவதில் வீணாக காலம் கடத்துபவனோ அவன் தான் தாமஸ ( தமோ குணம் நிரம்ம்பிய) கர்த்தா( செயல் புரிபவன்).

அர்ச்சுனன்: பகவானே! ஞானம் ,கர்மம்,கர்த்தா மூவர்க்கும் உல்ள மூன்றுவகைப் பிரிவுகளைச் சொன்னீர்கள்.இவைகளத் தவிர மேலும் என்னென்ன பிரிவுகள் ( பேதங்களை நான் தெரிந்த்து கொள்ள வேன்டும்?

பகவான்: அர்ச்சுனா! கர்மங்களைச் சேகரிக்கும் கருவிகளில் புத்தியும் சக்தியும் ( மிகுந்த பிடிவாததுடன் கூடிய தாரண சக்தி)கொள்ளவேண்டியது அவசியம் குணங்களைச் சார்ந்த புத்தியும் , ஞாபக சக்தியும் மூன்று வகைப்படும்,அதாவது காரியத்தில் ஈடுபாடு ,விடுபாடு ( பிரவிருத்தி, நிவிருத்தி) செய்யத்தக்கது,தாகதது,அச்சம்,அச்சமின்மை,தளை,விடுதலை,( பந்தம், மோட்சம்) அவைகளைச் சரிவர உணரும் அறிவுதான் சாத்வீக புத்தி.

அர்ச்சுனன்: பகவானே1 இராட்சத புத்தி எத்தகையது?

பகவான்: ஹே பார்த்தா! எந்தவொரு அறிவு தர்மம் செய்யத்தக்கது,தகாதது ஆகியவகைளை சரியாக அறிவதில்லையோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எவ்வாறு இருக்கும்?

பகவான்: – பிருதையின்( குந்தி) மைந்தனே!தமோ குணத்தின் ஆதிக்கத்திற்கு  ஆள்பட்ட புத்தி தருமத்தை அதர்மமாக்கவும் அதர்மத்தை தர்மமாகவும் இதேபோல் எல்லாவற்றையும் மாறாகவே அறியும் அறிவு தாம்ஸ புத்தி இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும் தீயவையெல்லாம் ந்ல்லவையாகவும் தோன்றும்,இதன்படியே செயல்புரியவும் தோன்றும்.

அர்ச்சுனன்: பகவானே! சாத்வீகமான திருதி ( தாரணசக்தி) எது?

பகவான்: ஹே பார்த்தா! சமத்துவ உணர்வுடன் கூடிய ( திருதி) பிறழாத உறுதி புத்தியுடன் துணையுடன் மனிதன் மனம், பிராணன், புலன்கள் சார்ந்த செயல்களை ஏற்கிறான்.அவற்றை முறைப்படுத்துகிறான்,இத்தகைய ஞாபகசக்தி தான் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத புத்தி( திருதி) எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! பயனை விரும்பும் மனிதன் எந்த நினைவாற்றலின் துணையைக் கொண்டு அறம், பொருள், இன்பம் மூன்றையும் மிக்க ஈடுபாடுடன் ஏற்கிறானோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எப்படிப்பட்டது?

பகவான்: ஹே பார்த்தா! தீய புத்தியுள்ளவன் எந்தத் தாரண ஞாபக சக்திமூலம் தூக்கம்,அச்சம்,கவலை,துயரம்,கர்மம் ஆகியவைகளை விடாதிருக்கிறானோஅதுதான் தாமஸ குணம் உள்ள புத்தி.

அர்ச்சுனன்: பகவானே!தாமஸ குணமுள்ளவன் உறக்கம் முதலிய கீழ் நிலை இயல்புகளை ஏன் கைவிடாமல் மேற்கொண்டிருக்கிறான்?

பகவான்: அர்ச்சுனா! இலைகளால் சுகம் கிடைப்பதால் கைவிடவிரும்புவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அந்த சுகம் எத்தகையது? நான் அறிந்து கொள்ளலாமா?

பகவான்: பரதவம்சத்தின் தலை சிறந்தவனே! அந்த சுகம் மூன்று வகைப்படும்.சாத்வீக சுகம்,இராட்சஜசுகம்.தாமஸ சுகம்.இவற்றில் எந்தச் சுகத்தில் வழக்கமான ஈடுபாடு காரணமாக மனநிறைவு கிட்டுகிறதோ, எதனால் துக்கங்கள் விலகுகின்றனவோ, எது பரமாத்மாவிடம்பற்றுதல் கொண்ட அறிவின் மகிழ்ச்சியோடு பிறந்ததோ,எது உலகில் வாழ்வில் ஈடுபாடு கொன்ட காரணத்தால் ஆரம்பத்தில் நஞ்சு போலும் இறுதியில் அமுதம் போலும் அமைகிறதோ அதுதான் சாத்வீகமான சுகம்.

அர்ச்சுனன்:தாமஸ சுகம் எப்படியிருக்கும் பகவானே?

பகவான்:தூக்கம் , சோம்பல், மதிமயக்கம் காரணமாக ஏற்படும் தாமஸ சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும் மோகாந்த காலத்தில் மூழ்கிவிடும்.பின்னர் துன்பங்களைத் தரும்.

அர்ச்சுனன்: பகவானே!சாத்வீகம்,இராட்சதம், தாமஸம் எனும் முக்குணங்களின் செயற்கையால் இன்னும் எந்தப் பொருட்களில் எல்லாம் மூன்று வித்தியாசங்கள் ஏற்படுகின்றன?

பகவான்:அர்ச்சுனா! ஒரு பேருண்மையை புரிந்து கொள்.இம்மூன்று குணங்களின் செயற்கையால் பாகுபாடு ( பேதம்) காணாத பொருள் எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது .பூமியிலும் ,மேலுலகிலும்,மனிதர்களிடமும் தேவர்களிடமும்,மற்ற இடங்களிலும், இனங்களிலும் எந்தவொரு பொருளும், இயற்கை ஏற்படுத்தியுள்ள அம் மூன்று குணங்களையும் சார்ந்திராமல் தனித்திருக்க முடியாது.இவை எங்கும் எவற்றிலும் எக்காலத்திலும் வியாபித்திருக்கின்றன.

அர்ச்சுனன்: இந்தக்  குணங்களில் இருந்து விடுபட என்ன வழி பகவானே?

பகவான்:அர்ச்சுனா! இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களின் இயல்பான குணங்களை அடிப்படையாக கொண்டுதான் பிராமணர்,சத்திரியர்,வைசியர்.சூத்திரர்( அந்தணர்,அரசர்,வணிகர்,உழவர்)எனும் நான்கு வகை வர்ணங்கள்( இனங்கள்) வகுக்கப்பட்டன.ஆகையால் நால்வகையினரும் தம்மினத்திற்கு ஏற்புடைய கருமங்களை சரிவரச் செய்து வருவதால் தான் முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபடவழி வகுக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! பிராமணருக்கு விதிக்கப்பட்ட கருமங்கள் எவை?அவற்றை அறிய ஆவலாய் உள்ளேன்?

பகவான்: அர்ச்சுனா!

1, உள்ளத்தை அடக்கி வாழுதல்.
2. புலன்களை தம்வசப்படுத்தி வாழுதல்.
3. அறநெறிகளை பேணிவளர்க்க உடல்வருத்தம் போன்ற சிரமங்களை சகித்து கொள்ளல்.
4.உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல்.
5.பிறர் புரிந்த குற்றங்களை பொறுத்தல் மன்னித்தல்.
6.உள்ளம் உடல் இரண்டையும் வலிமையுடன் வைத்திருத்தல்
.

7.வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளை நன்கு பயின்று நல்லறிவு வளர்த்தல்.
8.வேல்வி முதலான தூய நெறிகளை நடைமுறைப்படி செயல்படுத்தல்.
9. பரமாத்மா வேதம் முதலியவற்றில்  நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு நல்ல ஆத்திகனாக மக்களுக்கு முன் மாதிரியாக வாழவேண்டும்.இவைதான் பிராமணர்களின் இயல்பான கருமங்கள்.

அர்ச்சுனன்: பகவானே!சத்திரியர்களுக்குரிய( அரசர்களுக்குரிய) காரியங்கள் எவை?

பகவான்:

1. திறமையும்  துணிவும் மிகுந்த வீரம்.
2. பொலிவு( தேஜஸ்)
3.உறுதி
4.மக்கள் பராமரிப்பு ஆட்சி பரிபாலனம்.
5.போர்க்களத்தில் புறம்காணத தீரம்.
6.தானதர்மங்களில் தராள குணம்.
7.ஆட்சிபுரியும் நிர்வாக திறமை இவைகளே சத்திரியர்களுக்குரிய இயல்புகள் செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! வைசியர்களுக்குரிய இயல்புகள் எவை?

பகவான்:
1. நிலசாவுபடிக்கு உதவுதல்,பயிரிடல்,விவசாயம்
2. பசுக்களை பராமரித்தல்
3. நேர்மையுடன் வியாபாரம் தொழில் நடத்துதல் இவைகளே வைசீயர்களுக்கு வணிகர்களுக்குள்ள இயல்பான செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சூத்திரர்களுக்கு உள்ள பணிகள் எவை?

பகவான்: தம்மினத்தவர்களோடு மற்ற மூன்று இனத்தவர்களையும் வாழ்வித்தலும்,வளர்த்து வலிமையுள்ளவர்களாக ஆக்குவதும் பயிர்த்தொழில் மூலம் மக்களுக்கு பணிபுரிவதும் இவர்களுக்குரிய பணிகள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நான்கு வர்ணத்தார்களும் தமக்கென விதிக்கப்பட்ட பணிகளை செய்து வருவதால் என்ன ஆகும்?

பகவான்: அர்ச்சுனா! இந்த நால்வகை இனத்தவரும் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவதால் சமூகமும் நாடும் மேம்பாடும் ஒவ்வொரு இனத்தவரும் தமக்குரிய பணிகளில் சுயநல வேட்கையில்லாமல் பற்றுதலான ஈடுபாடுடன் முனைந்திருப்பவர்கள் பரமாத்மாவை அடைகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் எவ்விதம் பரமாத்மாவை அடைகிறார்கள்?

பகவான்:அர்ச்சுனா! பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உயிரனங்களிலும் உற்பத்தியாகின்றன.எல்லாப் பிராணிகளிடத்திலும் எல்லா இடங்களிலும் பரமாத்மா வியாபித்திருக்கிறார்.பரமாத்மாவிற்கு மனிதன் செய்யும் பூசை அவன் அவனுக்கு ஏற்பட்ட பணிகளை ஒழுங்காக செய்வதுதான் .அதன்மூலமே மனிதன் காரிய சித்தியடைகிறான்.அதாவது பரமாத்மாவிடம் ஒன்றிணைகிறான்.

அர்ச்சுனன்: கண்ணா! மனிதன் தன் இனத்திற்கேற்பட்ட கருமங்களை மட்டும் ஏன் செய்து வரவேன்டும்? பிற இனத்திற்குரிய பணிகளையும் ஏன் இணைத்துச் செய்யக் கூடாது?

பகவான்: தம்பி அர்ச்சுனா! அவரவர் தமக்கு ஏற்பட்ட அவைகளுக்கென்ற விதிக்கப்பட்ட கர்மங்களை சரிவரச் செய்து வந்தாலே போதும்.தன்னினத்திற்குரிய செயல்களை விட பிற இனத்தின் செயல் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ இருந்தாலும் அதை மேற்கொள்ளலாகாது.தனக்கென உரிய செயலை அது தாள்வானதுஎன்று கருதி புறக்கணிக்கவும் கூடாது.இயல்புக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள சுயதர்மமான கடமைப் பணிகளை செய்யும் மனிதன் ஒருபோதும் பாவத்திற்கு இலக்காவது இல்லை.குந்தியின் மைந்தனே!குற்றம் குறை இருந்தாலும் மனிதன் சுயதர்மத்தை ( கடமைப்பணியை) விட்டுவிடலாகாது.நெருப்பு எரியத்தொடங்கும்போது புகையைக் கக்குவது போல் ஒவ்வொரு கருமம் தொடக்கத்தில் ஏதாவது குற்றம் குறையுள்ளதாக இருக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! கருமங்களில் சிறிதளவுகூட குறையில்லாதிருக்க ஏதாவது உபயம் ( வழிவகைகள்) உள்ளதா?

பகவான்:அர்ச்சுனா! இருக்கிறது. சாங்கியயோகத்தால் சாதிக்கலாம்.எவருடைய புத்தி எல்லா இடங்களிலும் முற்றிலும் பற்றுதல் இல்லாமல் இருக்கிறதோ, எவருடைய உடல் கட்டுபாட்டில் உள்ளதோ , எவர் எந்தப் பொருளிலும் சிறிதளவு கூட ஆசாபாசம் வைப்பதில்லையோ அத்தகையவர் சாங்கிய யோகம் மூலமாக ” நைஷகர்மியசித்தி”( செயல் ஒழிந்த பிரம்ம நிலை)அடைகிறார்.அதாவது அவருடைய எல்லா செயல்களும் செயலற்றுப் போகின்றன.செயல்களால் ஏற்படும் சிறிதளவு தோஷம் கூட அவரைத் தீண்டுவதில்லை. ( 49)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் குறிப்பிட்ட  நைஷகர்மியசித்தியை அடையும் வழிமுறைகள் என்ன?

பகவான்:அர்ச்சுனா! அந்தக்கரணம் பரிசுத்தமாக இருப்பது சித்தி இதைப் பெற்ற மனிதன் ஞானத்தின் மேலான நிலையான பிரம்மத்தை எந்த வழிமுறையில் அடைகிறானோ ,அதை சுருக்கமாக சொல்லுகிறேன்.நன்கே அறிந்து கொள்.அர்ச்சுனா! அந்த மனிதன் சாத்வீக புத்தி கொண்டவன்,வைராக்கிய சித்தமுள்ளவன்.தனிமையில் தன்வயத்தில் வாழப் பழக்கப்பட்டவன்.ஆகார நியமம் கொண்டவன்.துணிவுடன் புலன்களை அடக்கி வைத்துக்கொள்ளும் சாதகன்,,உள்ளம்,உரை,செயல் இவற்றை கட்டுப்படுத்தி புலனுகர்ச்சியை தியாகம் செய்பவன்.அவன் விருப்பு , வெறுப்பை கடந்து பராமாத்மா தியானத்தில் லயிக்கிறான். அவன் அகங்காரம், பிடிவாதம்,செருக்கு,காமம் , வென்சினம், பொருள் சேகரிக்கும் பேராசை ஆகியவைகளை துறந்து மமதையில்லாமல் மன அமைதியாக வழ்ந்து பிரம்ம நிலையை அடைய தகுதி பெறுகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பிரம்ம நிலையை அடையத் தகுதி பெற்ற பின் என்னாகிறது?

பகவான்:அர்ச்சுனா! பிரம்ம மயமான நிலையை அடைந்து மகிழ்ச்சி கொண்ட சாதகன் எதற்காகவும் , எவருக்காகவும் ,வருத்தமோ விருப்பமோ கொள்ளுவதில்லை.சகல பிராணிகளிடமும் அந்த ஞானி சமநிலையுடன் அன்பும் பரிவும் காட்டுகிறான்.இத்தகைய சாதக புருஷருக்கு பரமாத்வாகிய என்னிடம் பராபக்தி (உத்தமமான பக்தி) நிறைந்திருக்கிறது.

அர்ச்சுனன்: பராபக்தி ஏற்படுவதால் என்ன ஆகிறது பகவானே?

பகவான்: இந்த உத்தம பக்தியால் சாதக புருஷன் என்னுடைய சத்திய சொரூபத்தை உள்ள படி அறிகிறான் தத்துவ ஞானத்தின் துணைகொண்டு நல்லுணர்வுடன் அதன் பயனாக என்னுள் ஐக்கியம் அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே!உங்களை அடைவதற்கு வேறு சிறந்த உபாயமும் உள்ளதா?

பகவான்: மிகச் சிறந்த வழியிருக்கிறது.

அர்ச்சுனன்: எம்பெருமானே! அது என்ன என்பதை அறியத்தரும்படி வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! எந்த உத்தமமான பக்தன் என்னையே சரணாகதியாக அடைகிறானோ,என்னையே எண்ணியே எண்ணி எனக்கே சமர்ப்பணமாக எல்லா காரியங்களையும் செய்து வருகிறானோ அவன் என் அருளால் சாசுவதமான உத்தம நிலையை ( பரமபதம்)அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நிலைக்கு நான் செய்ய வேண்டியது என்ன?

பகவான்: தம்பி அர்ச்சுனா!நீ என்றுமே என்னிடம் முழு ஈடுபாட்டுடன் இரு.நீ செய்யும் எல்லாக் காரியங்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு.நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் பொருள்களிலும் நீ கொண்டிருக்கும் பற்றுதலை அகற்றிக் கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எப்போது என்னிடமே சிந்தையை செலுத்தி வாழ்ந்து வா.என் சார்பிலேயே செயலாற்றுவதாக கருதிக்கொள்.

அர்ச்சுனன்: பகவானே! உங்களிடமே எப்போதும் சிந்தையை செலுத்தி வாழ்வதில் என்ன ஆகும்?

பகவான்:  அர்ச்சுனா!என்னிடம் சிந்தையை செலுத்தி வாழ்வதால் என் அருள் உனக்கு இலகுவில் கிட்டுகிறது.இதனால் இன்னல்கள் இடையூறுகளில் இருந்து விடுபடுவாய்.ஒருவேளை நீ மமதையின் காரணமாக என்னையும் என் பேச்சையும் மதிக்காது போனால் உனக்கு வீழ்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

அர்ச்சுனன்: எப்படியான வீழ்ச்சி எனக்கு ஏற்படும்?

பகவான்:  அர்ச்சுனா! அகங்காரத்தை துணைகொண்டு நீ இப்போது போர்புரிய வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறாயே,இந்த தீர்மானம் பொய்யானது.காரணம் உன்னுடைய சத்திரய சுபாவம் ( இயல்பு) உன்னை போரில் ஈடுபடுத்தத்தான் செய்யும்.குந்தியின் மைந்தனே!தன் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட அல்லது ஏற்கப்பட்ட கர்மத்திற்கு கட்டுப்பட்டவன் நீ.உன் மதிமயக்கம் ( மோகம்) காரணமாக போர் புரிய விரும்பதாதது நீடிக்காது.இந்த போரையே நீ ஷத்திரிய சுபாவத்திற்கு ஆட்பட்டு அதன் தூன்டுதல்களுடன் செய்யத்தான் போகிறாய். தொடர்ந்து செய்.நீயே வெற்றி பெறுவாய்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தசத்திரிய சுபாவம் போர்புரிதல் எனும் சுயதர்ம கர்மத்தை எப்படிச் செய்யத் தூண்டும்.எப்படி செய்விக்க முடியும்?

பகவான்:  அர்ச்சுனா! எல்லப் பிராணிகளுக்கும் புகுந்திருக்கும் அந்தர்மியாமியான சர்வேஸ்வரன்( பரமாத்மா) தன்மானத்தினால் சரீரம் எனும் இயந்திரத்தில் அமர்ந்து எல்லாப் எல்லாப் பிராணிகளையும் அவரவர் இயல்புப்படி ( சுபாவ சுய தர்மப்படி) இயக்குகிறான்.செயல் புரிய வைக்கிறான்.ஆட்டிப்படைக்கிறான்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தப் பரவசமான ( பிறசக்திக்கு ஆள்பட்டிருக்கும்) நிலையிலிருந்து வெளிவர என்ன வழி?( சுபாப தர்மத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது)

பகவான்:  பரதவம்சத்தின் வீரப் புதல்வனே!நீ “எல்லாமே அவன் தான்” எனும் நம்பிக்கையுடன் அந்தர்யாமியான சர்வேஸ்வரினிடம் சரணடைந்து விடு.அவருடைய பேரருளால் உனக்கு இந்த உலகத்திலிருந்து விடுபட்ட நிம்மதியுடன் சாசுவதமான பரமபதம் கிடைக்கும்.இது மிக மிக ரகசியமான சரணாகதி தத்துவம்.இந்த அரிய தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.நீ இதுபற்றி நன்கு சிந்தித்து உன் விருப்பப்படி தெரிவு செய்.

பகவானே! நான் என்னுடைய விருப்பப்படி எதுவும் செய்யவில்லை.நீங்களே கூறுங்கள்.நான் என்ன செய்ய வேண்டும்.

பகவான்: அப்படியானால் மிக்க ரகசியமான பரம தத்துவத்தை மறுபடியும் கேள்.நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.ஆதலால் உன் நன்மைக்கு வேண்டியதைக் கூறுவேன்.

அர்ச்சுனன்: சர்வேசா ! எனக்கு நன்மை தரும் இதமான அருளுரை எது?
பகவான்: நீ என்னையே போற்றி ஆராதிக்கும் பரம பக்தனாகி விடு.என்னிடமே உன் மனதைச் செலுத்து.இப்படி இருப்பதால் நீ என்னைப் பெறுவாய்.இதை நான் உனக்குச் சத்திய பிரதிக்கினையாகக் கூறுகிறேன்.என் அன்புக்கு உரியவன் நீ.உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

அர்ச்சுனன்: நான் நீங்கள் அறிவுறுத்துமாறு செய்ய இயலாமல் போனால் என் நிலை என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எல்லாத் தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணாகப் பற்றிக்கொள்.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிடுத்து விடுகிறேன்,நீ கவலை கலக்கம் இல்லாமல் தெளிவாக பூரண நம்பிக்கையோடு இரு.

அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் மிகவும் சுலபமானதும்,உத்தமமானதுமான தத்துவத்தை உபதேசித்திருக்கிறீர்கள்.இதை நான் மற்றவர்களுக்கெல்லாம் தெரிவிக்கலாமா?

பகவான்: கூடாது.கூடாது.இது மிகவும் பத்திரமாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது.சகிப்புத்தன்மையில்லாத மனத்திட்பம் இல்லாத,நம்பிக்கை இல்லாத எவடுக்கும் சொல்லி விடாதே!மேலும் எவர் என்னிடம் பக்தி கொள்ளவில்லையோ, இத்தத்துவத்தை கேட்க விரும்பவில்லையோ, குற்றமுள்ள நெஞ்சும் நோக்கமும் கொண்டிருக்கிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் இந்த அரிய ரகசிய தத்துவத்தை சொல்லிவிடாதே.

அர்ச்சுனன்: இதைத்தவிர நீங்கள் கூறிய மற்ற விஷயங்களை எவருக்குச் சொல்லலாம்?
பகவான்: என்னிடம் பக்தி கொன்டவர்களிடம் சொல்.எந்த ஞானவான் என்னிடம் பராபக்தி( மிக ஆழ்ந்த பக்தி சிரத்தை)கொண்டிருப்பதால் உந்தப்பட்டு மிக அரிய ரகசியத் தத்துவங்கள் நிரம்பிய இந்த பகவத் கீதையை ( பகவான் கருத்துரை) என் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்கிறானோ, அவன் என்னைப் பெறுகிறான்.மேலும் அவனைப் போல் என்னும் இல்லை.இப்பூமண்டலத்திலேயே அவனுக்கு நிகரான என் அன்பன் வேறு எவனும் இல்லை.

அர்ச்சுனன்: இதகைய அரிய உயரிய பணியைச் செய்ய முடியாது போனால்?

பகவான்: எனக்கும் உனக்கும் இடையில் இப்போது நிகழ்ந்த இந்த உடையாடல்களைக் கவனத்துடன் பயின்றால் போதும்.அவன் ஞானக்ஞம் செய்து என்னைப் பூசித்து போற்றியதாகும்.இதுவே எனது கொள்கை.

அர்ச்சுனன்:இதைப் பயிலவும் இயலாது போனால்?

பகவான்: இந்த உரையாடல்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட தத்துவங்களைப் பிறரும் கூற ஒருமுறை கவனமாக ,சிரத்தையுடன் கேட்டுக் கொண்டாலும் போதும்,கேட்பவன் பாவபந்தங்களிலிருந்து விடுபடுகிறான்.புண்ணியசாலிகள் மேலான உலகில் இடம் பெறுகிறான்.
அர்ச்சுனா! நான் உபதேசித்ததை எல்லாம் மனப்பூர்வமாக,கவனமாகக் கேட்டுக் கொண்டாயா?அக்ஞானத்தால் ஏற்பட்டிருந்த உன் மோகமயக்கம் விலகிவிட்டதா?

அர்ச்சுனன்:அச்சுதா!எம் பெருமானே!என் மோக மயக்கம் விலகியது.நல்ல தெளிந்த நினைவு ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் உங்கள் அருளால் ஏற்பட்டதுதான்.உங்கள் கீதோபதேசத்தைக் கேட்டதால் மட்டும் அல்ல.உங்களது கிருபைக்கே இந்த சக்தி உள்ளது.நான் ஐயம் திரிபு இல்லாமல் தெளிவாக திடமாக இப்போது இருக்கிறேன்.இப்போது நான் மேலான மகிமையான ஆணையைச் சிரமேற்கொண்டு போர் செய்து என் கடமையை நிறைவேற்றுவேன்.

போர்க்களத்தில் நடந்த சகல நிகழ்ச்சிகைளையும் திருதராஷ்டின மன்னனுக்கு சொல்லிக் கொண்டு வந்த சஞ்சயனை மகாராஜாதிரும்பவும் அவனிடம் வினவுகிறார்.அதற்கு சஞ்சயன் சொல்கிறான் மகாராஜாவே பகவான் வாசுதேவருக்கும் மகாத்மா அர்ச்சுனனுக்கும் இடையில் நிகழ்ந்த சகல உரையாடலையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மிகவும் அற்புதமான இந்த தத்துவ விளக்க கருத்துரையை கேட்கும் போதும் அவற்றை நினைக்கும் போதும் என்னுடம்பு சிலிர்க்கிறது.பேரின்பம் பொங்குகிறது.

திருதராஷ்டின மன்னர்: சஞ்சயா!உனக்கு இந்த உரையாடலைக் கேட்கும் பாக்கியம் எப்படிக் கிட்டியது?
சஞ்சயன்: இது மிகவும் இரகசியமான தத்துவங்களை நிறைந்த உரையாடல். போர்க்கள நிகழ்ச்சிகளை தாங்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தினால் வியாச பகவானின் அருளாசியால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது .சாட்சாத் சர்வேசுவரனான , யோகேஸ்வரனான ஸ்ரீ பரமாத்மா திருவாய் மலர்ந்தருள பரம பக்தனான அர்ச்சுனன் கேட்டுக்கொண்டிருக்க அந்த நிலையிலேயே ( குருபரம்பரை வழியாக இல்லாமல்) நான் கீதோபதேசத்தை செவிமடுத்திருக்கிறேன்.

 திருதராஷ்டினன்: சஞ்சயா! இதைக்கேட்டு கொண்டிருந்ததால் இதன் மூலம் உனக்கு ஏற்பட்ட பிரபாவம் என்ன?

சஞ்சயன்: பேரரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பக்த  அர்ச்சுனனும் தமக்குள் நிகழ்த்திய இந்த அற்புதமான் உரையாடலை நினைத்து நினைத்து புல்லரித்து போனேன்.மகிழ்ந்து பெருமிதம்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்பெருமித மகிழ்ச்சிக்கு உனக்கு வேறு காரணமும் உள்ளதா?

சஞ்சயன்: உள்ளது மகராஜா பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிக அற்புதமான ஒப்புயர்வில்லாத அந்த விஸ்வரூப தரிசனத்தை நான் என்னுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் பேராச்சரியம் ஏற்படுகிறது.அதை எண்ணி எண்ணி ஆனந்தப்பரவசம் அடைகிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்போழுது நீ என்ன தீர்மானத்திற்கு வந்திருக்கிறாய்?

சஞ்சயன்: மகாராஜா! எந்த இடத்தில் எவர்தரப்பில் யோகேஸ்வராரன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு காண்டீப தனுர்தாரியான மாவீரர் அர்ச்சுனன் இருக்கிறாரோ ,அங்கு தான் வெற்றி ஐஸ்வரியம்,திடமான நீதி, நெறி இடம் பெறும். இதுவே திண்ணம், இதுதான் எனது திடமான தீர்மானம்

  1. April 17, 2010 at 2:38 pm | #1

    naan arinth vilakkangalil inthea vilakkamea eankku thelivaaka purikirathu

  2. AMR
    October 25, 2011 at 2:59 am | #2

    Arputham !! paranthaamanin aasigaludan punniyam peruveergal !!

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 50 other followers