எட்டுக்கு இணை ஏதுமில்லை
எட்டுக்கு இணை ஏதுமில்லை
மனிதனை ஆட்டி வைப்பவை ஒன்பது கிரகங்கள் என்பது சோதிடம். உலகத்தையே ஆட்டிப்படைப்பதும் இந்த ஒன்பது எண்கள்தான் என்பது அறிவியல். ஜனநாயகமே இந்த எண்ணிக்கையில்தானே அடங்கியிருக்கிறது. வான்இயற்பியல் (Astro Physics) விஞ்ஞானியைக் கேட்டால் உலகம் காலம் என்பதில் தோன்றி அதிலேயே ஒடுங்குவதாகக் கூறுவார்கள். அந்தக் கால தத்துவத்திற்கும் இந்த ஒன்பது எண்கள்தான் அடிப்படை. கம்ப்யூட்டருக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 என்பது மட்டும்தான் தெரியும். அந்தப் பூஜ்யத்தில் அது சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஒன்பது எண்களுமே சிறப்பானவை தான் இருந்தாலும் நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம். அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும். நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும். எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.
மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம். சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!
எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (இருந்தால்) நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள். எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது. பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. வைணவர்களின் வேதநூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதில் உள்ள பாடல்கள் காலப்போக்கில் மறைந்து போயின. வீரநாராயண புரத்தில் வைணவர்கள் சிலர் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் எட்டாம் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தைப் பாடியதைக் கேட்ட நாதமுனிகள் பின்னர் நாலாயிரம் பாடல்களையும் மீட்டுக்கொடுத்தார். ஆதலால் எட்டாம் எண் ஞானத்திற்குரிய எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளத்தளவில் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. இதன் வடிவம் எட்டு.
இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.
எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.
மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளனர். இதில் மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர், அத்வானி, ஜோதிபாசு, முரசொலி மாறன் உள்பட பல தலைவர்கள் 8ஆம் எண்ணில் பிறந்துள்ளனர்.
எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.
எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்; ஆனால் இருக்காது. இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை. எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.
ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.
மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.
ரஷியாவில் அணுஉலை ஒன்றில் கொதித்துக் கொண்டிருந்த அணுக்கலவையிலிருந்து ஒரு சிறிய துளி வெளியில் விழுந்து விட்டது. அதைத் தொலைவிலிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணிப்பொறிகள் மூலமாக விஞ்ஞானிகள் பார்த்தார்கள். அந்த ஒரு சிறு துளி வெளியில் வந்து விழுந்தவுடன் ஆடிய ஆட்டம் இதுவரையில் உலகில் கண்டறியாத அற்புத நடனமென்றும், அந்த நடனத்தின் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றும் கூறினார்கள். அந்த அணுவிலும் தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும். அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் படைக்கிறான்; நிலை நிறுத்துகிறான். அழிக்கின்றான். ஆம்;
ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.
எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; அது எண் கோண வடிவில் இருக்கிறது. கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள். இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
எகிப்திய பிரமிடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதன் உட்புறம் ஏக்கர் கணக்கில் பெரியது. அதன் நடுநாயகமாக இருக்கும் பகுதியில்தான் இறந்த எகிப்திய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அடங்கிய நவரத்தினப் பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேரான மேல் பகுதிதான் வெளியில் தெரியும் கூம்பு வடிவம். பேழைகளுக்கு நேராக மேலே உள்ள பகுதி எண் கோண வடிவில் அமைந்திருக்கும். அதை மேல்புறத்தில் மூடுவதற்கு ஒவ்வொன்றும் எட்டு டன் எடையுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மிகளுக்கு மேலேயுள்ள இந்த எண்கோல் வழியாகத்தான் அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் மன்னர்கள் தங்கள் அரசியருடன் பகலில் சொர்க்கலோகத்திற்குச் சென்று அங்குப் பகலெல்லாம் இருந்துவிட்டு இரவில் அதே எண்கோண வழியாக மம்மிக்குத் திரும்பி விடுகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.
குழந்தை பிறக்கும்போது அதன் தலையின் உச்சித் துர தோலால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளரத்தான் மண்டையோடு வளர்ந்து கூடுகிறது. குழந்தை பிறக்கும்போதிருந்த உச்சித்துளை வட்டவடிவமானது அல்ல. அது எண்கோண வடிவிலானது. எனவே, அதையும் யோகித பிரம்மரந்திரம் என்றே கூறுவார்கள். உடலிலிருந்து உயிர் பிரியும்போது உச்சித் துளை வழியாகப் பிரிந்து சென்றால் அந்த உயிர் நேரே சொர்க்கத்திற்கும் மேற்பட்ட பல உயர்ந்த உலகங்களுக்குச் சென்று விடுகிறது. அது மீண்டும் பூமிக்கு வருவதில்லை. யோகிகள் நினைத்தால் தன் உடலில் பெரிய அக்கிணியை உருவாக்கிக் கொண்டு அதைத் தலை உச்சிக்குச் செலுத்திப் பிரம்மரந்திரத்தை வெடிக்கச் செய்து அதன் வழியாக மேலுக்கு மேலான உலகத்திற்கு செல்வார்கள். இதனைக் கபாலமோட்சம் என்பார்கள்.
புதுவைக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதினத்தின் சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்தின் குருநாதர் இங்குள்ள முருகன் சந்நிதியை ஒட்டிக் கீழே செல்லும் நிலவறையுள் சென்று ஞானாக்கினியால் தம்மை எரித்துக்கொண்டு இறைவனோடு ஐக்கியமானார். அவரை இன்றும் ஒடுக்கத்துச் சுவாமிகள் என்றே அழைப்பார்கள். ஞானிகள் எவ்வாறு விரும்புகிறார்களோ அவ்வாறே ஐக்கியம் ஆவார்கள்.
எண்சாண் உயரமுள்ள நம் உடலே ஒரு கோயில்; அதில் இதயமே மூலஸ்தானம். உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயமாம் என்றார் திருமூலர். நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் கோயில் கொண்டுள்ளான். நாம் கருப்பையில் இருக்கும்போது அவன் எப்படி அங்கு வந்திருப்பான். உடல் ஓயும்போது எந்த வழியாகப் புறப்பட்டு போவான். கருவாய் இருந்தபோது நம் உச்சித்துளை வழியே வந்து வந்த வழியிலேயே சென்றிருப்பானோ அந்தக் கள்வன்?
அவையெல்லாம் மனித அறிவுக்கு எட்டாதவை; அதே திருமூலர் உள்ளத்தின் உள்ளே தான் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான்; எனக்கு ஏற்படும் இரக்கம், கருணை எல்லாம் அந்த வள்ளலால் வந்தவை; என் ஓட்டை உடம்புக்குள் எப்படியோ வந்து புகுந்து எப்படியோ புறப்பட்டுத் தப்பிச் சென்று விடும் அந்த கள்ளர்கள் தலைவனை யாரால் அறிய முடியும்? என்று கேட்கிறார்.
உள்ளத்து ளேதான் கரந்துஎங்கும் நின்றவன்;
வள்ளல்; தலைமகன்; மலர்உறை மாதவன்;
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே
திருமந்திரம்: 1531
இந்தக் கள்ளன் மண்டையோட்டின் உச்சித்துளை யாகிய உடம்புக்கோயிலின் பிரம்மரந்திரம் மூலம் வந்திருப்பானோ?
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
கடில்போது தந்தளித்த கள்வர் போலும்
என்று அப்பர் அடிகளும் கூறுகிறாரே. அப்படித்தான் இருக்குமோ?
அறிவுக்கெல்லாம் அறிவாக விளங்கும் அவனை அறிய யாரால் முடியும்? விஞ்ஞானிகளால் முடியாது; ஆனால் ஞானிகளால் முடியும். அவர்கள் அறிந்து கூறுவதை நம்புவோம்.
இப்போது உங்கள் உச்சந்தலையில் கைவைத்துச் சொல்லுங்கள்! எட்டு கெட்ட எண்ணா?
Credit- http://www.puducherryexpress.com
எண் – 9
எண் -ஒன்பது: 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஒன்பதாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் ஒன்பதுக்குரிய கோள் செவ்வாய் ஆகும். எண் ஒன்பதுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் விளைவு எண் அதே எண்ணாக வருவதால் இந்த எண்ணுக்குரியவர்களுடன் நட்பு கொள்வதால் எவ்வித நன்மையும் தீமையும் ஏற்படாது. நீர் மேல் தாமரை இலை போல வாழ்க்கையில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வர். இவர்களை இல்லத் துறவிகள் என்று கூறினாலும் தகும். உடல் எச்செயலை செய்தாலும் மனம் மட்டும் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும். மெய்த்துறவிகளில் பலர் இந்த எண்ணுக்குரியவர்களாக இருப்பதைக் காணலாம்.
இந்த எண்ணுக்குரியவர்களில் சிலர் வேறுமாதிரியான பண்புகளைக் கொண்டிருப்பர். எண் ஒன்பதுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் விளைவு எண் ஒன்பதே வருவதால், எண் ஒன்பதுக்கு உரியவர்களை யார் எதிர்த்தாலும் தோல்வியே பெறுவர். இதனால் இவர்களுக்கு எதிரிகள் என்பதே கிடையாது. இது எப்படி சாத்தியம் எனில் இவர்கள் தமது எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளவோ இல்லையேல் அழித்துவிடவோ செய்கிறார்கள். எதிரியை நண்பனாக்கிக் கொள்ள பெருந்தன்மையும் புத்திசாலித்தனமும் வேண்டும். எதிரியை முற்றிலுமாக அழிப்பதற்கு கடுமையான வலிமை தேவை. இவை எல்லாவற்றையும் இந்த எண்ணுக்குரியவர்கள் கொண்டிருப்பர் என்பதில் ஐயமே இல்லை.
சித்தர்கள், ஞானிகள், துறவிகளில் பலர் இந்த எண்ணுக்குரியவர்களே. அதே சமயம் ராணுவ வீரர்களில் பலரையும் இந்த எண்ணில் காணலாம். இறைவனை எப்போதும் மறவாமல் இருப்போர் நற்கதி அடைவர் என்பதால் நற்கதி அடைவதற்கு உதவி செய்யும் கோள் செவ்வாய் ஆகிய முருகன் என்று கூறலாம்.
செவ்வாயின் நிலை கெட்டிருந்தால், இந்த எண்ணுக்குரியவர்கள் இரக்கமின்றி உயிர்களை வேட்டையாடுதல், கூலிப்படை நடத்துதல், போன்ற கொடூரமான செயல்களைச் செய்வர்.
எண் ஒன்பதிற்கு எழுத்துக்கள் எவையும் இல்லை.
காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
(காசிப முனிவர் இயற்றியது, கச்சியப்பர் மொழிபெயர்த்தது)
**************************************************
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
Quote
நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
பொருள்; இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றிபெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்
பொருள்: தொடர்ந்து இரு மாதங்கள் நாள் தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்
உரை எழுதியவர்: திருப்பனந்தாள் புலவர் க. துரியானந்தம்..
இந்து மதம்-அறிமுகம்
பெயர் வந்தவிதம்
இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள், சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.
பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.
கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.
எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன.
விரதம் இருக்கலாமா?

நல்லது தான்… ஆனால், கெட்டதும் கூட
பார்த்தால் நோஞ்சானாக இருப் பார்; கேட்டால்,” நான் இன்னிக்கு விரதம்; பச்சை தண்ணிகூட குடிக்க மாட்டேன்’ என்பார். நம்பிக்கை தேவை தான்; ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டு விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
தனியாக உண்ணா நோம்பு இருப்பதாக சொல்பவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டனர். ஒவ்வொருவரும், தினமுமே விரதம் தான் இருக்கிறோம் என்பதை. ஆம், இரவு தூங்கும் போது யாராவது சாப்பிடுகின்றனரா… இல்லையே? அதுவும் விரதம் தானே. அதுவே போதும் என்பது தான் டாக்டர்களின் கருத்து.
நல்லது தான்
உண்ணாமல் இருப்பது நல்லது தான்; இதோ கீழ் கண்ட வகையில் இருந்தால்…
* குறைந்த பட்ச உண்ணா நோன்பு தான் உடலுக்கு நல்லது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனைப்படி செய்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்.
* உடலில் உள்ள இன்சுலின் சுரப்பது சீராவது, கொழுப்பு சத்து குறைவது, எடை குறைவது ஆகியவை இதனால் ஏற்படும் நன்மை.
* இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட சில வகை நோய்கள் தீர, மருந்துகளுடன் இப்படி சில சமயம் குறைந்தபட்ச நோன்பு இருக்க டாக்டர்களே யோசனை சொல்கின்றனர்.
* மனஅழுத்தம், சோர்வு நீங்க குறைந்த பட்ச அளவில் வயிற்றை காயப்போடுவது நல்லது தான்.
* உண்ணா நோன்பால், சில செல்கள் வளர்ச்சி அடையும்; பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்; அதனால், இளமையுடன் இருக்க முடியும்.
கெட்டது எப்போது?
சாப்பிடாமல் வயிற்றை காயப் போடுவதால் கெடுதலும் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில், எதையும் பொருட்படுத்தாமல் மாதத்தில் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பதும், தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
* உடலுக்கு தொடர்ந்து போக வேண்டிய சத்துக்கள், வைட்டமின்கள் மறுக்கப்படுகிறது. அதனால், மூளை உட்பட முக்கிய உறுப்புகள் செயல்பாடு பாதிக்கும்.
* தண்ணீர் கூட குடிக்காமல் இருப் பதால், சிலருக்கு வயிற்றில் பிரச்னை உருவாகும். அதுவே, பெரிய கோளாறில் விட்டு விடும்.
* கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர் செய்கிறது. அது குடிக்காமல் இருந்தால், உடலில் கழிவுகள் சேர்ந்து விடும்.
* பெண்கள் அடிக்கடி உண்ணாமல் நோன்பு இருப்பது, அவர்கள் உடலில் ரத்த சோகை ஏற்பட வழி வகுத்துவிடும்.
* சர்க்கரை நோய் வரவும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
டாக்டரை கேளுங்க
விரதம் இருப்பதற்கெல்லாம் டாக்டரை கேட்பதா என்று நினைக்கலாம்; ஆனால், கண்டிப்பாக ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உரிய முறையில் ஆலோசனை வழங்குவார். நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் நீங்கி, கொழுப்பு சீராகிறது என்றாலும், அதை அடிக்கடி செய்யக்கூடாது.
ஒருவருக்கு எத்தனை மணி நேரம், சாப்பாடில்லாமல் உடல் தாங்கும் என்பதை டாக்டர் தான் சொல்ல முடியும்.
விரதம் இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போது தான் உடலில் உள்ள கழிவுகள் நொறுங்கி, வெளியேற வழி கிடைக்கும்; உடலில் சோர்வும் ஏற்படாது. விரதம் முடிந்ததும், உடனே “புல்’ கட்டு கட்டக்கூடாது; ஜூஸ் குடித்து விட்டு, படிப்படியாக அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும்.
இப்படியும் ஆபத்து
குண்டாக இருப்பவர்கள், யாரோ சொல்வதை கேட்டு, சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலோ, சாப்பிடாமல் விட்டாலோ உடல் எடை குறையும் என்று தவறான போக்கை கையாள்கின்றனர். கேட்டால்,
“டயட்’டில் இருக்கிறேன் என்பர். இது தான் மகா கெடுதல்.
சாப்பிடாமல் இருந்தால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அதேசமயத்தில் தவறான போக்கால், கொழுப்பு தவிர, உடல் பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பால், கொழுப்பு அதிகமாகி, மாறான விளைவை தான் ஏற்படுத்தும்.
இப்படி நிலைமை ஏற்பட்டால், சாப்பிடாமல் இருக்கும் ஒருவர், மேலும் குண்டாகி விடும் ஆபத்தும் உண்டு.
பிரஷ் ஜூஸ் போதும்
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்து. தண்ணீர் குடிப்பதுடன், பிரஷ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்பது பலருக்கு தெரிந்தும், இன்னமும் பாட்டில் கூல்டிரிங்க்கை தான் குடிக்கின்றனர்.
நம் உடலுக்கு 13 வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள், ஆரஞ்சு உட்பட பல பழங்களில் உள்ளன.
வீட்டில் தயாரிக்கப்படும் பழரசங்களில் தான் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளன. பழங்களை அழுகவிட்டு குப்பையில் போடுவதை விட, அவற்றை ரசமாக பிழிந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே, உடலில் எடை குறைந்து விடும்.
Credit- http://senthilvayal.wordpress.com
18.முடிவு- துறவின் பக்குவம்
அர்ச்சுனன்: எங்கும் பரந்துள்ள பெருமானே! நான் சன்னியாஸ யோகம் ( சாங்கிய யோகம்)தியாக யோகம்(கர்ம யோகம்) இரண்டின் தத்துவங்களையும் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.
பகவான்: அர்ச்சுனா! நான் சன்னியாசம் ,தியாகம் குறித்து சித்தாந்த வழிகளான தரிசனா சாரியர்களின் நால்வகை கருத்துக்களை விவரிக்கிறேன்.
1. பல வித்துவான்கள் காம்ய கருமங்களை ( தாம் விரும்பிச் செய்து வரும் காரியங்களை)துறப்பது சன்னியாசம் என்கிறார்கள்.
2. எல்லாக் காரியங்களுக்கும் உள்ள பயனைத் துறப்பது தியாகம் என்கிறார்கள் சிலர்.
3. சிலர் கருமங்களை ( காரியங்களை) குற்றமாகக் கருதிவிட்டு விடுவது தியாகம் என்கிறார்கள்.
4. வேறு சிலருடைய கருத்து வேள்வி( ஆசார அநுட்டானங்கள்)தானம் இவைகளைத் துறக்கலாகாது என்பது.
அர்ச்சுனன்: கண்ணபிரானே! இவை வேதாந்த வித்தகர்களின் கருத்துக்கள்- ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்து என்ன?
பகவான்:அர்ச்சுனா!பர வம்சத்தவரில் தலை சிறந்த வீரப் பெருமகனே!சன்னியாசம்,தியாகம் இவ்விரு தத்துவங்களுக்குள் முதலில் தியாகம் பற்றிய என்னுடைய கருத்தை அறிந்து கொள்.தியாகம் மூன்று வகப்படும் எனும் கருத்தைச் சொன்னேன்.வேள்வி,தானம்,தவம் மூன்று கருமங்களையும் துறந்துவிடக்கூடாது.செய்யாதிருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும்.காரணம் அவைகளில் ஒவ்வொன்றும் சான்றோர்களை,சிந்தனையாளர்களை பரிசுத்தபடுத்தவல்லது.
அர்ச்சுனன்: இந்த அளவிற்கு கருமங்களைச் செய்தால் போதுமா கண்ணா?
பகவான்: பார்த்தனே! இப்போது விவரித்த மூன்று வகை வேள்வி தானம், தவம், ஆகிய கருமங்களையு இது தவிர சாஸ்திரத்தின் மூலம் செய்ய வேண்டிய கருமங்களையும் , பற்றுதலையும் , பயனையும் ஒழித்தே இக்கருமங்கள் யாவும் செய்யப்பட வேன்டும் என்பது எனது நிச்சயமான , உத்தமமான கொள்கை.
அர்ச்சுனன்: பகவானே! மூன்று வகைப்பட்ட தியாகத்தின் சொரூபம் என்ன?
பகவான்: அர்ச்சுனா!ஏற்படுத்தப்பட்ட கருமங்களைத் துறப்பது எவருக்கும் ஏற்புடையதல்ல.மதிமயக்கம் காரணமாக இவைகளைத் துறப்பது தாமஸ ( தீமைதரும்) தியாகம்( விட்டுவிடல்).
விதிக்கபட்ட கருமங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட கருமங்களுக்கும் என்ன வித்தியாசம்?சாஸ்திரங்கள் என்ன காரியங்களைச் செய்து வர வேண்டும் என்று விதித்திருக்கின்றனவோ, அவை விதிக்கப்பட்ட கருமங்கள்.எல்லா விதிக்கப்பட்ட காரியங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடிக்க முடியாது.
சாஸ்திரங்களில் வாரத்தின் எல்லாத் தினங்களுக்கும் ( திங்கள், செவ்வாய் முதலிய தினங்கள்,பிரதமை,துதியை முதலான திதிகள்)விரத அநுட்டானங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன ,ஒரு மனிதன் இவைகளை எல்லாம் கடைப்பிடிக்க முனைந்தால் அவன் உண்டு உறங்கி பணி செய்வது இயலாது போகும்.ஆகையால் எல்லா விரத அநுட்டானங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது.
மனிதர்களின் வருணம்( இனம்) பிருமச்சாரியம், கிருகஸ்தம் முதலான ஆசிரம ( வாழ்கை, நிலை, சூழ்நிலை,இடம், காலம் சர்ர்ந்தது)இவைகளுக்கேற்ப எந்தக் கடமைகள் அவசியமாகின்றனவோ, அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.
உதாரணமாக பிராமணர், சஷ்த்திரியர், வைசியர் , சூத்திரர், இந்த நான்கு வருணத்தார்களில் எவர் எவருக்கு வாழ்க்கைக்கும் உடல் வளர்ச்சிக்கும் எத்தனை நியமங்கள் ( நெறி முறைகள்) ஒதுக்கப்பட்டுள்ளனவோ,அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.
அர்ச்சுனன்:ராஜஸ தியாகத்தின் சொரூபம் என்ன?
பகவான்: செய்ய வேண்டிய கருமங்களைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கருதி உடல் வருத்தம் ஏற்படுமே என்கிற பயத்தில் கடமைகளைக் கைவிடுவது ராஜஸதியாகம். இதனால் அமைதி கிட்டாமல் போகும்.
அர்ச்சுனன்:சாத்துவீக தியாகத்தின் சொரூபம் என்ன?
பகவான்: ஏற்படுத்தப்பட்ட ஏற்கப்பட்ட கருமங்களைச் செய்வது மனிதனின் அவசியமான கடமை என்கிற உணர்வுடன் பயன் விரும்பும் சுயநல நோக்கமில்லாமல் அக்கருமங்களைச் செய்து வருவது சாத்வீகத் தியாகம்.
அர்ச்சுனன்: தியாகம் செய்யும் மனிதன் எப்படிப்பட்டவர்?
பகவான்: அர்ச்சுனா! அவன் சுயநலம் கொண்டதும் மறுக்கப்பட்டதுமான கருமங்களைக் கை விடுகிறான் .ஆனால் வெறுப்போடு ஒதுக்குவதில்லை.சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையாகிய ( செய்யவேண்டிய) காரியங்களைச் செய்கிறான்.அதில் ஆசை பாசம் வைப்பதில்லை.இத்தகைய அறிவாளியான தியாகி எவ்வித ஐயப்பாடும் தயக்கமும் இல்லாமல் தன் நெறிநிலையில் திடமாக வாழ்கிறான். செயல்படுகிறான்.
அர்ச்சுனன்: கருமங்களைச் செய்வதில் ஆசாபாசம் கூடாது, செய்யாமல் விட்டுவது வெறுப்பினால் அல்ல. இவ்வளவு தொல்லையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? கருமமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன?
பகவான்: அர்ச்சுனா! உடல், உருவம் கொண்ட மனிதனால் கருமங்களைத் தானாக துறப்பது இயலாது.கருமங்களால் ஏற்படும் துயரங்களைத் துறக்கலாம்.அதாவது பலன்களை எதிர்பார்த்துக் கருமங்களைச் செய்யும் மனப்போக்கை மாற்றிக் கொள்ளலாம் கரும பலன்களைத் துறக்கும் மனிதன் தியாகி.
அர்ச்சுனன்: கருமபலன்கள் எத்தனை வகைப்படும்?
பகவான்: கருமபலன்கள் மூன்று வகைப்படும்
1. இஷ்டம்- அதாவது எந்தச் சூழ்நிலையை மனிதன் விரும்புகிறானோ அது
2.அநிஷ்டம் – எந்தச் சூழ்நிலையை விருப்பமில்லையோ அது
3. மிசிரம்-(இரண்டும் கலந்தது)-எதில் சில பகுதிகள் விரும்பதக்கதும் சில பகுதிகள் விரும்பத்தாகாதுமாக உள்ளதோ அத்தகையது.இம்மூன்று வகை கரும பலன்களும் பயன் கருதி கருமங்களை செய்பவர்களை பின் தொடரும் .இறந்த பிறகும் தொடரும் .பயன்பற்றி ஆசாபாசம் கொல்ளாதவர்களுக்கு கரும பயன்களின் பாதிப்பு இராது.
அர்ச்சுனன்: பகவானே! மூன்றுவகை பயன்களைக் கொண்ட கருமம் ஏற்பட எது காரணமாக அமைகின்றது?
பகவான்: அர்ச்சுனா! கருமங்களை அழிவுக்குட்பட்டவை என்று கூறும் சாங்கிய சித்தாத்தங்களில் எல்லா கருமங்களிற்கும் பயனளிக்கும் நிலைக்கு 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
அர்ச்சுனன்: பகவானே! அந்த 5 காரணங்கள் எவை?
பகவான்: அர்ச்சுனா! சரீரம், செய்பவன், பலவகை கருவிகள்,பலவகை செயல்கள் வழிவந்த தொடர்பு அனுபவம் இவ் ஐந்தும் காரணங்கள்.மனத்தாலும் சாஸ்திர சம்மதமான சாஸ்திர விருத்தமான செயல்களை ஆரம்பிக்கிறான்.இதற்கு அவ் ஐந்து காரணங்களும் தூண்டுதல் ஆகும்.
அர்ச்சுனன்: பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?
பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.
அர்ச்சுனன்: கருமங்கள் செய்யப்படுவதற்கு ஏற்படுவற்கும் ஐந்துகாரணங்களை கூறுவதின் நோக்கம் அல்லது கருத்து என்ன பகவானே?
பகவான்: அர்ச்சுனா! கருமம்( செயல்) உடல் வாக்கு உள்ளங்களால் ஏற்படுவது.ஆத்மாவால் செய்பவன் தன்மையில்லை.ஆனால் எவன் கருமங்களைச் செய்வது ஆத்மா என்று கூறுகிறானோ அவன் மதிகெட்டவன்.உண்மையை அறியாதவன்.அவனுடைய புத்தி சுத்தமானதல்ல.
அர்ச்சுனன்: பகவானே! ஆத்மாவை செயல்புரிபவன் ( கர்தா) இல்லையென்று கருதுவதால் என்ன ஆகிறது?
பகவான்: அர்ச்சுனா! என்னுடைய உள்ளத்தில் நான் தான் செய்கிறேன்.எனும் செருக்கு இல்லையோ, எவருடைய புத்தி கரும பலன்களில் நாட்டம் கொள்வதில்லையோ,கரும பலன்களை அனுபவிக்க முயல்வதில்லையோ, அவன் எதைச் செய்தாலும் அதன் பந்தத்தில் சிக்குவதில்லை.எல்லா உயிரினங்களையும் அவன் கொன்றாலும் அவன் கொலையாளி இல்லை.அதன் விளைவோ,பாதிப்போ அவனை கட்டுபடுத்துவதுமில்லைஅவன் பாதிக்கப்படுவதில்லை.
அர்ச்சுனன்: பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?
பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.
அர்ச்சுனன்:பகவானே! கருமங்களின் தூண்டுதல் ,சேகரித்தல், இவ்விரண்டிலும் முக்கியமானது எது? அவைகளின் முக்கிய பேதங்கள் எவை?
பகவான்:அர்ச்சுனா! குணங்களின் ( இயல்புகள்) தொடர்பால் ஒவ்வொரு பொருளிலும் ஏற்படும் வெவ்வேறு பேதங்களை( வித்தியாசங்களை)குறிப்பிடும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது இதுதன் அதாவது குணங்களிற்கு ஏற்ப ஞான்ம்,கர்மம்,கர்த்தா( செய்பவன்)இம்மூன்று முக்கிய பேதங்கள் ஏற்படுகின்றன.இவை பற்றியும் அர்ச்சுனா நீ நன்கு தெரிந்து கொள்.
அர்ச்சுனன்: பகவானே! ஞானத்திற்கு உள்ள மூன்று பிரிவுகளில் சாத்வீக ஞானம் எது?
பகவான்: அர்ச்சுனா!சித்தி பெற முயலும் சாதகர்( பயிற்சியாளர்)எந்த மெய்யறிவால்(ஞானம்) எல்லா பிரிவுகளும் கொன்ட பிராணிகளிடத்தில் பிரிவு பேதங்களை ( வித்தியாசங்களை) காணாமல் ஒரே நித்திய நிலையை காண்கிறாரோ அவருடைய மெய்யறிவுதான் சாத்வீக ஞானம்.
அர்ச்சுனன்: பகவானே! இராட்சத ஞானம் எது?
பகவான்: எப்படிப்பட்ட ஞானத்தால் பகுத்தறிவு உள்ள மனிதன் பல பல பிரிவுகள், வித்தியாசங்கள் கொண்ட பிராணிகளிடம் வெவ்வேறான தன்மைகளை காண்கிறார்களோ,உணர்கிறானோ அதுதான் இடாட்சத ஞானம்.அர்ச்சுனன்: கண்ணா ! தாமஸ ஞானம் எது?
பகவான்: அர்ச்சுனா! பிறந்து அழியும் சரீரத்தையே பூரண தத்துவமான ஆத்மா என்று கருதி ஆசாபாசம் கொண்டிருப்பது.பகுத்தறிவிற்கு பொருந்தாது.அது தத்துவ ஞானம் அற்றது.இழிவானது.தாமஸ ஞானம் எனப்படும்.
அர்ச்சுனன்: கண்ணா ! மூன்றுவகை கருமங்களில் சாத்வீக கருமம் எது?
பகவான்: எந்த ஏற்படுத்தப்பட்ட கருமங்கள் பயன் சார்ந்த ஆசை பாசம் இல்லாத மனிதனால் விருப்பு, வெறுப்பு, செருக்கு ஏதும் இல்லாமல் செய்யப்படுகிறதோ அவை சாத்வீகமானவை.
அர்ச்சுனன்: இராட்சத கர்மம் எது கண்ணா?
பகவான்: எந்தக் கருமம் அனுபவிக்கும் ஆர்வம் கொண்ட மனிதனால் செருக்கும் , முனைப்புமாக செய்யப்படுகிறதோ அது இராட்சத கர்மம்.
அர்ச்சுனன்: தாமஸ கர்மம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! எந்தக் காரியம் விளைவு.நட்டம், கேடு,வன்மைச்செயல்,தன் திறமை ஆகியவைகளை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக மோகத்துடன் ( ஆவலுடன்)ஆரம்பிக்கபடுகிறதோ அது தாமஸ கர்மம்.
அர்ச்சுனன்: கண்ணா! மூன்றுவகை கர்த்தாக்களில் ( செய்பவர்) சாத்வீக கர்த்தா எவர்?
பகவான்: அர்ச்சுனா எவர் செய்யும் கருமத்தில் சுயநல ஈடுபாடு இல்லாமல் செருக்கு இல்லாமல் பொறுமையும் உற்சாகமும் கொண்டு வெற்றி தோல்விகளில் ( இலாப நஷ்டங்களில்)சமநிலையோடு ( மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாமல்) இருந்து வருகிறாரோ அவர்தான் சாத்வீக கர்த்தர்.
அர்ச்சுனன்:இராட்சத கர்த்தா எத்தகையவர் கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! எவை ஆசை பாசம் கொண்டவராக செய்வினைப் பயனில் நாட்டம் உள்ளவராக, வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவராக தூய்மை இல்லாதவராக, மகிழ்ச்சி துயரங்களிற்கு அடிமைப்பட்டவராக இருக்கிறாரோ அவர் தான் இராட்சத கர்த்தர்.
அர்ச்சுனன்: தாமச கர்த்தா என்பவர் எப்படி இருப்பர் கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! எவன் கவனக்குறைவாகவும், செய்யத்தக்கது, தகாதது எனும் விவேகம் இல்லாமலும் இருக்கிறானோ,கல்வி கேள்விகளில் ஈடுபடாமல் இருக்கிறானோ, திமிரும் வீம்பும் வீண்பிடிவாதமும் கொண்டிருக்கிறானோ, செய்நன்றி இல்லாதிருக்கிறானோ,சோம்பேறியோ,துயரத்தில் ஆழ்ந்திருகிறானோ, செயல் புரிவதில் வீணாக காலம் கடத்துபவனோ அவன் தான் தாமஸ ( தமோ குணம் நிரம்ம்பிய) கர்த்தா( செயல் புரிபவன்).
அர்ச்சுனன்: பகவானே! ஞானம் ,கர்மம்,கர்த்தா மூவர்க்கும் உல்ள மூன்றுவகைப் பிரிவுகளைச் சொன்னீர்கள்.இவைகளத் தவிர மேலும் என்னென்ன பிரிவுகள் ( பேதங்களை நான் தெரிந்த்து கொள்ள வேன்டும்?
பகவான்: அர்ச்சுனா! கர்மங்களைச் சேகரிக்கும் கருவிகளில் புத்தியும் சக்தியும் ( மிகுந்த பிடிவாததுடன் கூடிய தாரண சக்தி)கொள்ளவேண்டியது அவசியம் குணங்களைச் சார்ந்த புத்தியும் , ஞாபக சக்தியும் மூன்று வகைப்படும்,அதாவது காரியத்தில் ஈடுபாடு ,விடுபாடு ( பிரவிருத்தி, நிவிருத்தி) செய்யத்தக்கது,தாகதது,அச்சம்,அச்சமின்மை,தளை,விடுதலை,( பந்தம், மோட்சம்) அவைகளைச் சரிவர உணரும் அறிவுதான் சாத்வீக புத்தி.
அர்ச்சுனன்: பகவானே1 இராட்சத புத்தி எத்தகையது?
பகவான்: ஹே பார்த்தா! எந்தவொரு அறிவு தர்மம் செய்யத்தக்கது,தகாதது ஆகியவகைளை சரியாக அறிவதில்லையோ அது இராட்சத புத்தி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எவ்வாறு இருக்கும்?
பகவான்: – பிருதையின்( குந்தி) மைந்தனே!தமோ குணத்தின் ஆதிக்கத்திற்கு ஆள்பட்ட புத்தி தருமத்தை அதர்மமாக்கவும் அதர்மத்தை தர்மமாகவும் இதேபோல் எல்லாவற்றையும் மாறாகவே அறியும் அறிவு தாம்ஸ புத்தி இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும் தீயவையெல்லாம் ந்ல்லவையாகவும் தோன்றும்,இதன்படியே செயல்புரியவும் தோன்றும்.
அர்ச்சுனன்: பகவானே! சாத்வீகமான திருதி ( தாரணசக்தி) எது?
பகவான்: ஹே பார்த்தா! சமத்துவ உணர்வுடன் கூடிய ( திருதி) பிறழாத உறுதி புத்தியுடன் துணையுடன் மனிதன் மனம், பிராணன், புலன்கள் சார்ந்த செயல்களை ஏற்கிறான்.அவற்றை முறைப்படுத்துகிறான்,இத்தகைய ஞாபகசக்தி தான் சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத புத்தி( திருதி) எத்தகையது பகவானே?
பகவான்: அர்ச்சுனா! பயனை விரும்பும் மனிதன் எந்த நினைவாற்றலின் துணையைக் கொண்டு அறம், பொருள், இன்பம் மூன்றையும் மிக்க ஈடுபாடுடன் ஏற்கிறானோ அது இராட்சத புத்தி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எப்படிப்பட்டது?
பகவான்: ஹே பார்த்தா! தீய புத்தியுள்ளவன் எந்தத் தாரண ஞாபக சக்திமூலம் தூக்கம்,அச்சம்,கவலை,துயரம்,கர்மம் ஆகியவைகளை விடாதிருக்கிறானோஅதுதான் தாமஸ குணம் உள்ள புத்தி.
அர்ச்சுனன்: பகவானே!தாமஸ குணமுள்ளவன் உறக்கம் முதலிய கீழ் நிலை இயல்புகளை ஏன் கைவிடாமல் மேற்கொண்டிருக்கிறான்?
பகவான்: அர்ச்சுனா! இலைகளால் சுகம் கிடைப்பதால் கைவிடவிரும்புவதில்லை.
அர்ச்சுனன்: பகவானே! அந்த சுகம் எத்தகையது? நான் அறிந்து கொள்ளலாமா?
பகவான்: பரதவம்சத்தின் தலை சிறந்தவனே! அந்த சுகம் மூன்று வகைப்படும்.சாத்வீக சுகம்,இராட்சஜசுகம்.தாமஸ சுகம்.இவற்றில் எந்தச் சுகத்தில் வழக்கமான ஈடுபாடு காரணமாக மனநிறைவு கிட்டுகிறதோ, எதனால் துக்கங்கள் விலகுகின்றனவோ, எது பரமாத்மாவிடம்பற்றுதல் கொண்ட அறிவின் மகிழ்ச்சியோடு பிறந்ததோ,எது உலகில் வாழ்வில் ஈடுபாடு கொன்ட காரணத்தால் ஆரம்பத்தில் நஞ்சு போலும் இறுதியில் அமுதம் போலும் அமைகிறதோ அதுதான் சாத்வீகமான சுகம்.
அர்ச்சுனன்:தாமஸ சுகம் எப்படியிருக்கும் பகவானே?
பகவான்:தூக்கம் , சோம்பல், மதிமயக்கம் காரணமாக ஏற்படும் தாமஸ சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும் மோகாந்த காலத்தில் மூழ்கிவிடும்.பின்னர் துன்பங்களைத் தரும்.
அர்ச்சுனன்: பகவானே!சாத்வீகம்,இராட்சதம், தாமஸம் எனும் முக்குணங்களின் செயற்கையால் இன்னும் எந்தப் பொருட்களில் எல்லாம் மூன்று வித்தியாசங்கள் ஏற்படுகின்றன?
பகவான்:அர்ச்சுனா! ஒரு பேருண்மையை புரிந்து கொள்.இம்மூன்று குணங்களின் செயற்கையால் பாகுபாடு ( பேதம்) காணாத பொருள் எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது .பூமியிலும் ,மேலுலகிலும்,மனிதர்களிடமும் தேவர்களிடமும்,மற்ற இடங்களிலும், இனங்களிலும் எந்தவொரு பொருளும், இயற்கை ஏற்படுத்தியுள்ள அம் மூன்று குணங்களையும் சார்ந்திராமல் தனித்திருக்க முடியாது.இவை எங்கும் எவற்றிலும் எக்காலத்திலும் வியாபித்திருக்கின்றன.
அர்ச்சுனன்: இந்தக் குணங்களில் இருந்து விடுபட என்ன வழி பகவானே?
பகவான்:அர்ச்சுனா! இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களின் இயல்பான குணங்களை அடிப்படையாக கொண்டுதான் பிராமணர்,சத்திரியர்,வைசியர்.சூத்திரர்( அந்தணர்,அரசர்,வணிகர்,உழவர்)எனும் நான்கு வகை வர்ணங்கள்( இனங்கள்) வகுக்கப்பட்டன.ஆகையால் நால்வகையினரும் தம்மினத்திற்கு ஏற்புடைய கருமங்களை சரிவரச் செய்து வருவதால் தான் முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபடவழி வகுக்கும்.
அர்ச்சுனன்: பகவானே! பிராமணருக்கு விதிக்கப்பட்ட கருமங்கள் எவை?அவற்றை அறிய ஆவலாய் உள்ளேன்?
பகவான்: அர்ச்சுனா!
1, உள்ளத்தை அடக்கி வாழுதல்.
2. புலன்களை தம்வசப்படுத்தி வாழுதல்.
3. அறநெறிகளை பேணிவளர்க்க உடல்வருத்தம் போன்ற சிரமங்களை சகித்து கொள்ளல்.
4.உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல்.
5.பிறர் புரிந்த குற்றங்களை பொறுத்தல் மன்னித்தல்.
6.உள்ளம் உடல் இரண்டையும் வலிமையுடன் வைத்திருத்தல்.
7.வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளை நன்கு பயின்று நல்லறிவு வளர்த்தல்.
8.வேல்வி முதலான தூய நெறிகளை நடைமுறைப்படி செயல்படுத்தல்.
9. பரமாத்மா வேதம் முதலியவற்றில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு நல்ல ஆத்திகனாக மக்களுக்கு முன் மாதிரியாக வாழவேண்டும்.இவைதான் பிராமணர்களின் இயல்பான கருமங்கள்.
அர்ச்சுனன்: பகவானே!சத்திரியர்களுக்குரிய( அரசர்களுக்குரிய) காரியங்கள் எவை?
பகவான்:
1. திறமையும் துணிவும் மிகுந்த வீரம்.
2. பொலிவு( தேஜஸ்)
3.உறுதி
4.மக்கள் பராமரிப்பு ஆட்சி பரிபாலனம்.
5.போர்க்களத்தில் புறம்காணத தீரம்.
6.தானதர்மங்களில் தராள குணம்.
7.ஆட்சிபுரியும் நிர்வாக திறமை இவைகளே சத்திரியர்களுக்குரிய இயல்புகள் செயல்கள்.
அர்ச்சுனன்: பகவானே! வைசியர்களுக்குரிய இயல்புகள் எவை?
பகவான்:
1. நிலசாவுபடிக்கு உதவுதல்,பயிரிடல்,விவசாயம்
2. பசுக்களை பராமரித்தல்
3. நேர்மையுடன் வியாபாரம் தொழில் நடத்துதல் இவைகளே வைசீயர்களுக்கு வணிகர்களுக்குள்ள இயல்பான செயல்கள்.
அர்ச்சுனன்: பகவானே! சூத்திரர்களுக்கு உள்ள பணிகள் எவை?
பகவான்: தம்மினத்தவர்களோடு மற்ற மூன்று இனத்தவர்களையும் வாழ்வித்தலும்,வளர்த்து வலிமையுள்ளவர்களாக ஆக்குவதும் பயிர்த்தொழில் மூலம் மக்களுக்கு பணிபுரிவதும் இவர்களுக்குரிய பணிகள்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த நான்கு வர்ணத்தார்களும் தமக்கென விதிக்கப்பட்ட பணிகளை செய்து வருவதால் என்ன ஆகும்?
பகவான்: அர்ச்சுனா! இந்த நால்வகை இனத்தவரும் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவதால் சமூகமும் நாடும் மேம்பாடும் ஒவ்வொரு இனத்தவரும் தமக்குரிய பணிகளில் சுயநல வேட்கையில்லாமல் பற்றுதலான ஈடுபாடுடன் முனைந்திருப்பவர்கள் பரமாத்மாவை அடைகிறார்கள்.
அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் எவ்விதம் பரமாத்மாவை அடைகிறார்கள்?
பகவான்:அர்ச்சுனா! பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உயிரனங்களிலும் உற்பத்தியாகின்றன.எல்லாப் பிராணிகளிடத்திலும் எல்லா இடங்களிலும் பரமாத்மா வியாபித்திருக்கிறார்.பரமாத்மாவிற்கு மனிதன் செய்யும் பூசை அவன் அவனுக்கு ஏற்பட்ட பணிகளை ஒழுங்காக செய்வதுதான் .அதன்மூலமே மனிதன் காரிய சித்தியடைகிறான்.அதாவது பரமாத்மாவிடம் ஒன்றிணைகிறான்.
அர்ச்சுனன்: கண்ணா! மனிதன் தன் இனத்திற்கேற்பட்ட கருமங்களை மட்டும் ஏன் செய்து வரவேன்டும்? பிற இனத்திற்குரிய பணிகளையும் ஏன் இணைத்துச் செய்யக் கூடாது?
பகவான்: தம்பி அர்ச்சுனா! அவரவர் தமக்கு ஏற்பட்ட அவைகளுக்கென்ற விதிக்கப்பட்ட கர்மங்களை சரிவரச் செய்து வந்தாலே போதும்.தன்னினத்திற்குரிய செயல்களை விட பிற இனத்தின் செயல் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ இருந்தாலும் அதை மேற்கொள்ளலாகாது.தனக்கென உரிய செயலை அது தாள்வானதுஎன்று கருதி புறக்கணிக்கவும் கூடாது.இயல்புக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள சுயதர்மமான கடமைப் பணிகளை செய்யும் மனிதன் ஒருபோதும் பாவத்திற்கு இலக்காவது இல்லை.குந்தியின் மைந்தனே!குற்றம் குறை இருந்தாலும் மனிதன் சுயதர்மத்தை ( கடமைப்பணியை) விட்டுவிடலாகாது.நெருப்பு எரியத்தொடங்கும்போது புகையைக் கக்குவது போல் ஒவ்வொரு கருமம் தொடக்கத்தில் ஏதாவது குற்றம் குறையுள்ளதாக இருக்கும்.
அர்ச்சுனன்: பகவானே! கருமங்களில் சிறிதளவுகூட குறையில்லாதிருக்க ஏதாவது உபயம் ( வழிவகைகள்) உள்ளதா?
பகவான்:அர்ச்சுனா! இருக்கிறது. சாங்கியயோகத்தால் சாதிக்கலாம்.எவருடைய புத்தி எல்லா இடங்களிலும் முற்றிலும் பற்றுதல் இல்லாமல் இருக்கிறதோ, எவருடைய உடல் கட்டுபாட்டில் உள்ளதோ , எவர் எந்தப் பொருளிலும் சிறிதளவு கூட ஆசாபாசம் வைப்பதில்லையோ அத்தகையவர் சாங்கிய யோகம் மூலமாக ” நைஷகர்மியசித்தி”( செயல் ஒழிந்த பிரம்ம நிலை)அடைகிறார்.அதாவது அவருடைய எல்லா செயல்களும் செயலற்றுப் போகின்றன.செயல்களால் ஏற்படும் சிறிதளவு தோஷம் கூட அவரைத் தீண்டுவதில்லை. ( 49)
அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் குறிப்பிட்ட நைஷகர்மியசித்தியை அடையும் வழிமுறைகள் என்ன?
பகவான்:அர்ச்சுனா! அந்தக்கரணம் பரிசுத்தமாக இருப்பது சித்தி இதைப் பெற்ற மனிதன் ஞானத்தின் மேலான நிலையான பிரம்மத்தை எந்த வழிமுறையில் அடைகிறானோ ,அதை சுருக்கமாக சொல்லுகிறேன்.நன்கே அறிந்து கொள்.அர்ச்சுனா! அந்த மனிதன் சாத்வீக புத்தி கொண்டவன்,வைராக்கிய சித்தமுள்ளவன்.தனிமையில் தன்வயத்தில் வாழப் பழக்கப்பட்டவன்.ஆகார நியமம் கொண்டவன்.துணிவுடன் புலன்களை அடக்கி வைத்துக்கொள்ளும் சாதகன்,,உள்ளம்,உரை,செயல் இவற்றை கட்டுப்படுத்தி புலனுகர்ச்சியை தியாகம் செய்பவன்.அவன் விருப்பு , வெறுப்பை கடந்து பராமாத்மா தியானத்தில் லயிக்கிறான். அவன் அகங்காரம், பிடிவாதம்,செருக்கு,காமம் , வென்சினம், பொருள் சேகரிக்கும் பேராசை ஆகியவைகளை துறந்து மமதையில்லாமல் மன அமைதியாக வழ்ந்து பிரம்ம நிலையை அடைய தகுதி பெறுகிறான்.
அர்ச்சுனன்: பகவானே! பிரம்ம நிலையை அடையத் தகுதி பெற்ற பின் என்னாகிறது?
பகவான்:அர்ச்சுனா! பிரம்ம மயமான நிலையை அடைந்து மகிழ்ச்சி கொண்ட சாதகன் எதற்காகவும் , எவருக்காகவும் ,வருத்தமோ விருப்பமோ கொள்ளுவதில்லை.சகல பிராணிகளிடமும் அந்த ஞானி சமநிலையுடன் அன்பும் பரிவும் காட்டுகிறான்.இத்தகைய சாதக புருஷருக்கு பரமாத்வாகிய என்னிடம் பராபக்தி (உத்தமமான பக்தி) நிறைந்திருக்கிறது.
அர்ச்சுனன்: பராபக்தி ஏற்படுவதால் என்ன ஆகிறது பகவானே?
பகவான்: இந்த உத்தம பக்தியால் சாதக புருஷன் என்னுடைய சத்திய சொரூபத்தை உள்ள படி அறிகிறான் தத்துவ ஞானத்தின் துணைகொண்டு நல்லுணர்வுடன் அதன் பயனாக என்னுள் ஐக்கியம் அடைகிறான்.
அர்ச்சுனன்: பகவானே!உங்களை அடைவதற்கு வேறு சிறந்த உபாயமும் உள்ளதா?
பகவான்: மிகச் சிறந்த வழியிருக்கிறது.
அர்ச்சுனன்: எம்பெருமானே! அது என்ன என்பதை அறியத்தரும்படி வேன்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா! எந்த உத்தமமான பக்தன் என்னையே சரணாகதியாக அடைகிறானோ,என்னையே எண்ணியே எண்ணி எனக்கே சமர்ப்பணமாக எல்லா காரியங்களையும் செய்து வருகிறானோ அவன் என் அருளால் சாசுவதமான உத்தம நிலையை ( பரமபதம்)அடைகிறான்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த நிலைக்கு நான் செய்ய வேண்டியது என்ன?
பகவான்: தம்பி அர்ச்சுனா!நீ என்றுமே என்னிடம் முழு ஈடுபாட்டுடன் இரு.நீ செய்யும் எல்லாக் காரியங்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு.நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் பொருள்களிலும் நீ கொண்டிருக்கும் பற்றுதலை அகற்றிக் கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எப்போது என்னிடமே சிந்தையை செலுத்தி வாழ்ந்து வா.என் சார்பிலேயே செயலாற்றுவதாக கருதிக்கொள்.
அர்ச்சுனன்: பகவானே! உங்களிடமே எப்போதும் சிந்தையை செலுத்தி வாழ்வதில் என்ன ஆகும்?
பகவான்: அர்ச்சுனா!என்னிடம் சிந்தையை செலுத்தி வாழ்வதால் என் அருள் உனக்கு இலகுவில் கிட்டுகிறது.இதனால் இன்னல்கள் இடையூறுகளில் இருந்து விடுபடுவாய்.ஒருவேளை நீ மமதையின் காரணமாக என்னையும் என் பேச்சையும் மதிக்காது போனால் உனக்கு வீழ்ச்சி ஏற்படுவது நிச்சயம்.
அர்ச்சுனன்: எப்படியான வீழ்ச்சி எனக்கு ஏற்படும்?
பகவான்: அர்ச்சுனா! அகங்காரத்தை துணைகொண்டு நீ இப்போது போர்புரிய வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறாயே,இந்த தீர்மானம் பொய்யானது.காரணம் உன்னுடைய சத்திரய சுபாவம் ( இயல்பு) உன்னை போரில் ஈடுபடுத்தத்தான் செய்யும்.குந்தியின் மைந்தனே!தன் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட அல்லது ஏற்கப்பட்ட கர்மத்திற்கு கட்டுப்பட்டவன் நீ.உன் மதிமயக்கம் ( மோகம்) காரணமாக போர் புரிய விரும்பதாதது நீடிக்காது.இந்த போரையே நீ ஷத்திரிய சுபாவத்திற்கு ஆட்பட்டு அதன் தூன்டுதல்களுடன் செய்யத்தான் போகிறாய். தொடர்ந்து செய்.நீயே வெற்றி பெறுவாய்.
அர்ச்சுனன்: பகவேனே! இந்தசத்திரிய சுபாவம் போர்புரிதல் எனும் சுயதர்ம கர்மத்தை எப்படிச் செய்யத் தூண்டும்.எப்படி செய்விக்க முடியும்?
பகவான்: அர்ச்சுனா! எல்லப் பிராணிகளுக்கும் புகுந்திருக்கும் அந்தர்மியாமியான சர்வேஸ்வரன்( பரமாத்மா) தன்மானத்தினால் சரீரம் எனும் இயந்திரத்தில் அமர்ந்து எல்லாப் எல்லாப் பிராணிகளையும் அவரவர் இயல்புப்படி ( சுபாவ சுய தர்மப்படி) இயக்குகிறான்.செயல் புரிய வைக்கிறான்.ஆட்டிப்படைக்கிறான்.
அர்ச்சுனன்: பகவேனே! இந்தப் பரவசமான ( பிறசக்திக்கு ஆள்பட்டிருக்கும்) நிலையிலிருந்து வெளிவர என்ன வழி?( சுபாப தர்மத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது)
பகவான்: பரதவம்சத்தின் வீரப் புதல்வனே!நீ “எல்லாமே அவன் தான்” எனும் நம்பிக்கையுடன் அந்தர்யாமியான சர்வேஸ்வரினிடம் சரணடைந்து விடு.அவருடைய பேரருளால் உனக்கு இந்த உலகத்திலிருந்து விடுபட்ட நிம்மதியுடன் சாசுவதமான பரமபதம் கிடைக்கும்.இது மிக மிக ரகசியமான சரணாகதி தத்துவம்.இந்த அரிய தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.நீ இதுபற்றி நன்கு சிந்தித்து உன் விருப்பப்படி தெரிவு செய்.
பகவானே! நான் என்னுடைய விருப்பப்படி எதுவும் செய்யவில்லை.நீங்களே கூறுங்கள்.நான் என்ன செய்ய வேண்டும்.
பகவான்: அப்படியானால் மிக்க ரகசியமான பரம தத்துவத்தை மறுபடியும் கேள்.நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.ஆதலால் உன் நன்மைக்கு வேண்டியதைக் கூறுவேன்.
அர்ச்சுனன்: சர்வேசா ! எனக்கு நன்மை தரும் இதமான அருளுரை எது?
பகவான்: நீ என்னையே போற்றி ஆராதிக்கும் பரம பக்தனாகி விடு.என்னிடமே உன் மனதைச் செலுத்து.இப்படி இருப்பதால் நீ என்னைப் பெறுவாய்.இதை நான் உனக்குச் சத்திய பிரதிக்கினையாகக் கூறுகிறேன்.என் அன்புக்கு உரியவன் நீ.உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
அர்ச்சுனன்: நான் நீங்கள் அறிவுறுத்துமாறு செய்ய இயலாமல் போனால் என் நிலை என்ன பகவானே?
பகவான்: அர்ச்சுனா! எல்லாத் தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணாகப் பற்றிக்கொள்.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிடுத்து விடுகிறேன்,நீ கவலை கலக்கம் இல்லாமல் தெளிவாக பூரண நம்பிக்கையோடு இரு.
அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் மிகவும் சுலபமானதும்,உத்தமமானதுமான தத்துவத்தை உபதேசித்திருக்கிறீர்கள்.இதை நான் மற்றவர்களுக்கெல்லாம் தெரிவிக்கலாமா?
பகவான்: கூடாது.கூடாது.இது மிகவும் பத்திரமாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது.சகிப்புத்தன்மையில்லாத மனத்திட்பம் இல்லாத,நம்பிக்கை இல்லாத எவடுக்கும் சொல்லி விடாதே!மேலும் எவர் என்னிடம் பக்தி கொள்ளவில்லையோ, இத்தத்துவத்தை கேட்க விரும்பவில்லையோ, குற்றமுள்ள நெஞ்சும் நோக்கமும் கொண்டிருக்கிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் இந்த அரிய ரகசிய தத்துவத்தை சொல்லிவிடாதே.
அர்ச்சுனன்: இதைத்தவிர நீங்கள் கூறிய மற்ற விஷயங்களை எவருக்குச் சொல்லலாம்?
பகவான்: என்னிடம் பக்தி கொன்டவர்களிடம் சொல்.எந்த ஞானவான் என்னிடம் பராபக்தி( மிக ஆழ்ந்த பக்தி சிரத்தை)கொண்டிருப்பதால் உந்தப்பட்டு மிக அரிய ரகசியத் தத்துவங்கள் நிரம்பிய இந்த பகவத் கீதையை ( பகவான் கருத்துரை) என் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்கிறானோ, அவன் என்னைப் பெறுகிறான்.மேலும் அவனைப் போல் என்னும் இல்லை.இப்பூமண்டலத்திலேயே அவனுக்கு நிகரான என் அன்பன் வேறு எவனும் இல்லை.
அர்ச்சுனன்: இதகைய அரிய உயரிய பணியைச் செய்ய முடியாது போனால்?
பகவான்: எனக்கும் உனக்கும் இடையில் இப்போது நிகழ்ந்த இந்த உடையாடல்களைக் கவனத்துடன் பயின்றால் போதும்.அவன் ஞானக்ஞம் செய்து என்னைப் பூசித்து போற்றியதாகும்.இதுவே எனது கொள்கை.
அர்ச்சுனன்:இதைப் பயிலவும் இயலாது போனால்?
பகவான்: இந்த உரையாடல்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட தத்துவங்களைப் பிறரும் கூற ஒருமுறை கவனமாக ,சிரத்தையுடன் கேட்டுக் கொண்டாலும் போதும்,கேட்பவன் பாவபந்தங்களிலிருந்து விடுபடுகிறான்.புண்ணியசாலிகள் மேலான உலகில் இடம் பெறுகிறான்.
அர்ச்சுனா! நான் உபதேசித்ததை எல்லாம் மனப்பூர்வமாக,கவனமாகக் கேட்டுக் கொண்டாயா?அக்ஞானத்தால் ஏற்பட்டிருந்த உன் மோகமயக்கம் விலகிவிட்டதா?
அர்ச்சுனன்:அச்சுதா!எம் பெருமானே!என் மோக மயக்கம் விலகியது.நல்ல தெளிந்த நினைவு ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் உங்கள் அருளால் ஏற்பட்டதுதான்.உங்கள் கீதோபதேசத்தைக் கேட்டதால் மட்டும் அல்ல.உங்களது கிருபைக்கே இந்த சக்தி உள்ளது.நான் ஐயம் திரிபு இல்லாமல் தெளிவாக திடமாக இப்போது இருக்கிறேன்.இப்போது நான் மேலான மகிமையான ஆணையைச் சிரமேற்கொண்டு போர் செய்து என் கடமையை நிறைவேற்றுவேன்.
போர்க்களத்தில் நடந்த சகல நிகழ்ச்சிகைளையும் திருதராஷ்டின மன்னனுக்கு சொல்லிக் கொண்டு வந்த சஞ்சயனை மகாராஜாதிரும்பவும் அவனிடம் வினவுகிறார்.அதற்கு சஞ்சயன் சொல்கிறான் மகாராஜாவே பகவான் வாசுதேவருக்கும் மகாத்மா அர்ச்சுனனுக்கும் இடையில் நிகழ்ந்த சகல உரையாடலையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மிகவும் அற்புதமான இந்த தத்துவ விளக்க கருத்துரையை கேட்கும் போதும் அவற்றை நினைக்கும் போதும் என்னுடம்பு சிலிர்க்கிறது.பேரின்பம் பொங்குகிறது.
திருதராஷ்டின மன்னர்: சஞ்சயா!உனக்கு இந்த உரையாடலைக் கேட்கும் பாக்கியம் எப்படிக் கிட்டியது?
சஞ்சயன்: இது மிகவும் இரகசியமான தத்துவங்களை நிறைந்த உரையாடல். போர்க்கள நிகழ்ச்சிகளை தாங்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தினால் வியாச பகவானின் அருளாசியால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது .சாட்சாத் சர்வேசுவரனான , யோகேஸ்வரனான ஸ்ரீ பரமாத்மா திருவாய் மலர்ந்தருள பரம பக்தனான அர்ச்சுனன் கேட்டுக்கொண்டிருக்க அந்த நிலையிலேயே ( குருபரம்பரை வழியாக இல்லாமல்) நான் கீதோபதேசத்தை செவிமடுத்திருக்கிறேன்.
திருதராஷ்டினன்: சஞ்சயா! இதைக்கேட்டு கொண்டிருந்ததால் இதன் மூலம் உனக்கு ஏற்பட்ட பிரபாவம் என்ன?
சஞ்சயன்: பேரரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பக்த அர்ச்சுனனும் தமக்குள் நிகழ்த்திய இந்த அற்புதமான் உரையாடலை நினைத்து நினைத்து புல்லரித்து போனேன்.மகிழ்ந்து பெருமிதம்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்பெருமித மகிழ்ச்சிக்கு உனக்கு வேறு காரணமும் உள்ளதா?
சஞ்சயன்: உள்ளது மகராஜா பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிக அற்புதமான ஒப்புயர்வில்லாத அந்த விஸ்வரூப தரிசனத்தை நான் என்னுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் பேராச்சரியம் ஏற்படுகிறது.அதை எண்ணி எண்ணி ஆனந்தப்பரவசம் அடைகிறேன்.
திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்போழுது நீ என்ன தீர்மானத்திற்கு வந்திருக்கிறாய்?
சஞ்சயன்: மகாராஜா! எந்த இடத்தில் எவர்தரப்பில் யோகேஸ்வராரன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு காண்டீப தனுர்தாரியான மாவீரர் அர்ச்சுனன் இருக்கிறாரோ ,அங்கு தான் வெற்றி ஐஸ்வரியம்,திடமான நீதி, நெறி இடம் பெறும். இதுவே திண்ணம், இதுதான் எனது திடமான தீர்மானம்
17.நம்பிக்கையின் பிரிவுகள்
அர்ச்சுனன்: வேண்டுகோள்:
கிருஷ்ண பரமாத்மாவே சாஸ்திர நியமங்களையும் விதிமுறைகளையும் அறியாத மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் உங்களைப் பூசிக்கிறார்கள்.வேள்வி முதலான புனித அநுட்டானங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி சிரத்தை சாத்வீகமானதா? ராஜஸமானதா? அல்லது தாமசமானதா?( அமைதியானதா? ஆடம்பரமானதா? கொடுமையனதா?)
பகவான்: அர்ச்சுனா!! மனிதர்களின் இயல்பு வழியாக ஏற்படும் சிரத்தை ஈடுபாடு மூன்று வகைப்படும்.அவை சாத்வீகம் ராச்சதம், தாமசம்.
அர்ச்சுனன்: மனித இயல்பின் மூலம் ஏற்படும் அந்த ஈடுபாடு ஏன் 3 வகைப்பட வேண்டும்?
பகவான்: பரத வம்சத்து புதல்வனே! எல்லா மனிதர்களிடமும் இடம்பெற்றுள்ள சிரத்தை அவர்களுடைய அந்தக் கரணம் எனும் உள்மன உணர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. ஈடுபாடு கொண்டு முனைபவன் சிரத்தை மயமானவன்.ஆகையால் எந்த மனிதனுக்கு எத்தகைய சிரத்தையுள்ளதோ அதன் சொரூபமாக அவன் இயல்பும் அமையும்.அவனது செயலும் நிலையும் அந்த இயல்புப்படியே அமையும்.
அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே அந்த சிரத்தையை எப்படி இனம் கண்டு கொள்வது?
பகவான்: சாத்வீகமான இயல்பு கொன்ட மனிதன் தேவதைகளை பூசித்து ஆராதிக்கின்றான்.இராட்சத இயல்பு கொண்டவன் யட்சர்களையும்,இராட்சதர்களையும் பூசிக்கிறார்கள்.தாமச குணம் கொண்டவர்கள் பூதங்கள் பிரேதங்களை பூசிக்கிறார்கள்.
அர்ச்சுனன்: சிரத்தை ஈடுபாடு இல்லாத மனிதர்களுக்கு என்ன அடையாளம்?
பகவான்: அர்ச்சுனா! சிரத்தையில்லாத மனிதர்கள் வீண் பெருமை கர்வம், பேராசை தீவிர ஈடுபாடு பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள்.சாத்திர விதிகளுக்கு புறம்பாக கொடும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.ஐம்பூதப் பொருட்களால் ஆன சரீரத்தையும் அந்தக் கரணத்தில் உள்ள என்னையும் துன்புறுத்துகிறர்கள்.இத்தகைய அஞ்ஞானிகளை நீ அசுர சுபாவம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொள்.
அர்ச்சுனன்: பகவானே! இதுவரையில் நீங்கள் பூசை, ஆராதனை, தவம் மூலமாக சிரத்தை கொண்டவர்கள், சிரத்தை இல்லாதவர்கள் என்னும் மனிதர்களை இனம் காண்பதைப் பற்றி உபதேசித்தீர்கள்.ஆனால் எவர் பூசை தவம் செய்யாதிருக்கிறார்களோஅவர்களை எப்படி அறிந்து கொள்வது?
பகவான்:அர்ச்சுனா! உணவின் சுவையைக் கொண்டு அதனை விரும்புபவர்களை அடையாளம் காணலாம்.( உணவு பழக்கம் மூலம் உண்பவர்களின் தராதரம் தெரியவரும்). காரணம் எல்லா மனிதர்களுக்கும் மூன்றுவகை உணவுகள் பிரியமானவை.இதைப் போல் வேள்வி,தவம், தானம் மூன்றும் மூன்று வகைப்பட்டவர்களுக்கும் பிரியமானவை. இந்த வித்தியாசத்தை இப்போது சொல்கிறேன் கேள்.
அர்ச்சுனன்: சாத்வீகமான மனிதனின் சுவை ஈடுபாடு எத்தகைய உணவில் ஏற்படுகின்றது?
பகவான்:அர்ச்சுனா! ஆயுள்,சாத்வீக குணங்கள்,உடல் வலிமை,ஆரோக்கியம்,சுகம்,மகிழ்ச்சி இவைகளை வளர்ப்பவையும் ,நிலையாக இருப்பவையும் இதயத்திற்கு வலிமை அளிப்பவையும் சுவையானவையும், ஈரப்பசை கொண்டவையுமான உணவுப்பண்டங்கள் சாத்வீகமான மனிதனிற்கு பிரியமானவைகள்.
அர்ச்சுனன்: இராட்சத மனிதனிற்கு பிடித்தமான உணவுகள் எவை?
பகவான்:மிகக் கசப்பும், புளிப்பும், உப்பும் உள்ளவை.மிகச் சூடானவை,காரமானவை,எரிச்சல் ஏற்படுத்துபவை.இத்தகைய பதார்த்தங்கள் இராட்சத குணம்படைத்தவர்களுக்கு பிடித்தவை.இவை துன்பத்தையும் சோகத்தையும், வருத்தத்தையும் நோயையும் ஏற்படுத்துகின்றன.
அர்ச்சுனன்: தாமச இயல்பு கொண்டவர்களுக்கு விருப்பமானவை எவை?
பகவான்: அர்ச்சுனா! அரைகுறையாக வெந்து சுவையில்லாதது,கொடுநாற்றம் கொண்டது.( மதுவகை,வெங்காயம்,உள்ளிப்பூண்டு போன்றவை)பழையது, ஊதிப்போனது, தீண்டத்தகாதது( இறைச்சி, மீன்,முட்டை முதலியவை).இப்பொருட்களில் தாமச குணமுள்ள மனிதர்களுக்கு ருசி சுவை மிக விருப்பம் அதிகம்.
அர்ச்சுனன்: பகவானே! ஆகாரவகைகள் மூன்றுவகைப்படுவதை அறிந்தேன்.இதேபோல் வேள்வி,தவம், தானம் இவையும் மூன்று வகைப்படும் என்றீர்கள்.இவைகளுக்குள்ள வேள்வியின் பிரிவுகளைப் பற்றி கூற வேண்டும்?
(முதலில் யசனம், பூசனம், போசனம், வேள்வி வழிபாடு உணவு மூன்றின் மூலமாக ஈடுபாடு சிரத்தையை அறியச்செய்தார்.அதன்மூலம் சாஸ்திர விதிகளை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கப் படுபவர்களை இனம் காணமுடியும்.ஆனால் சாஸ்திர விதிமுறைப்படி வேள்வி வழிபாடு உண்ணுதல் புரிபவர்களின் வித்தியாசங்ளை அறியச் செய்வதே இங்கு வேள்வி,தவம்,தான்ம் மூன்றுக்குரிய மூவகைப் பேதங்களையும் போதிக்கலானார்)
பகவான்: அர்ச்சுனா! வேள்வி செய்வது,நம் கடமையெனும் உணர்வோடு, மனப் பக்குவத்தோடு பயனை பற்றிச் சிந்திக்காமல் , சாஸ்திர விதிமுறைப்படி செய்யப்படும் வேள்வி சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத வேள்வி எத்தகையது?
பகவான்: பரதகுல செல்வனே! பயனை எதிபார்த்து சுயநலத்திற்காக செய்யப்படுவதும் பிறர் பராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் பகட்டாக செய்யப்படுவதும் இராட்சத வேள்வி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமச வேள்வி எத்தகையது?
பகவான்: சாஸ்திர விதிகளிற்கு புறம்பானதும் அன்னதானம் இல்லாததும் மந்திர உச்சரிப்பு அற்றதும் தட்சணை அளிப்பு இல்லாததும் சிரத்தையற்றதுமான வெறும் பகட்டு வேள்வி தாமச வேள்வி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தவம் எத்தனை வகைப்பட்டது என்பதை உபதேசிக்க வேன்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா!தவஸ்( தவம்) மூன்று வகைப்பட்டது.உடலால் வாக்கால், மனத்தால் புரிவது.தேவதைகள், பிராமணர்கள், குருமார்கள்,ஜீவன் முத்தர்களான் மகாபுருஷர்கள் இவர்களை போற்றி பூசிப்பது.நீர், மண் முதலியவற்றால் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்வது.உடல்சார்ந்த பணிகளை எளிதாகவும், நேரியதாகவும் வைத்திருத்தல்( பதட்டம் பிடிவாதம் கொள்ளாது இருத்தல்) பிரம்ம சரியத்தை கடைப்பிடித்தல். உடலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் .இதுதான் உடல் சார்ந்த தவம்.
அர்ச்சுனன்: வாக்கினால் புரியும் தவம் எத்தகையது கண்ணா?
பகவான்: எரிச்சல் ஊட்டுவதும் ஆத்திரம் ஊட்டுவதுமாக இல்லாத, உண்மையாக,பிரியமான நலம் தரும் வார்த்தைகளைப் பேசுவது.கல்வி வேள்விகளில் ஈடுபட்டிருப்பது.ஜெபம், அர்ச்சனை முதலியவற்றை பயில்வது.இவைதான் வாக்கினால் புரியும் தவம்.
அர்ச்சுனன்: மனத்தால் புரியும் தவம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! மனத்தை மகிழ்சியாக வைத்து கொள்வது.எப்போழுதும் இனிதாகப் பழகுவது.சிந்திக்கும் திறன்,மனவடக்கம்,தூயகருத்து இவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மானசீக தவம்.
இம்மூன்று வகை தவங்களையும் மிக்க ஈடுபாட்டுடன் பயனீட்டும் ஆசையில்லாமல் நன்றாக செய்து வந்தால் அதுதான் சாத்வீகமான தவம் எனப்படும்.
அர்ச்சுனன்: இராட்சத தவம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! எந்தத் தவம் சொந்த நலனுக்காகவும் , கெளரவுத்துக்காகவும் , போற்றுதலுக்காகவும் செய்யப்படுகிறதோ மேலும் பிறரை வியக்க வைக்க வேண்டிய பாசாங்காக செய்யப்படுகிறதோ,அதுதான் ரஜோகுணம் மேலோங்கிய பகட்டுத்தவம் .இதனால் நல்ல பலன் ஏற்படாது.கிடைக்கும் சிறிதளவு பலனும் அழிந்தே போகும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமசகுணம் மேலோங்கும் தவம் எது?
பகவான்: எந்த தவம் அறியாமையும் பிடிவாதமும் கொண்டு தம்மை வருத்திக்கொண்டு பிறரையும் துன்புறுத்திக் கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமச தவம் எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! இப்போது தானம் மூன்றுவகைப்படுவது எப்படி என்பது உபதேசிக்க வேண்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா! தானம் கொடுப்பது நம் கடமை எனும் கருத்துடன் பிரதிபலன் எதையும் எதிர்பராமல் செய்ய வேண்டும்.மேலும் இடம் , காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.இத்தகைய தானம் சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத தான்ம் எத்தகையது பகவானே?
பகவான்: அர்ச்சுனா! எந்தத் தானம் பிரதி உபகாரம் பெறுவதற்காகவோ அல்லது பிரதி பலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறதோ,மேலும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று வேண்டா வெறுப்பாக கட்டாயமாக அளிக்கபடுகிறதோ அதுவே இராட்சத தானம்.
அர்ச்சுனன்: தாமச தானம் எத்தகையது?
பகவான்: எந்தத் தானம் மரியாதையில்லாமல் அலட்சியமாக அவமதிப்புடன் தகுதியற்றவர்களுக்கு தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.
அர்ச்சுனன்: பகவானே! சிரத்தையுள்ள மனிதன் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி,தவம்,தானம் முதலிய அறப்பணிகளை எவ்வாறு தொடங்க வேண்டும்?
பகவான்: அர்ச்சுனா! ஓம்,தத்,சத்( பிரணவ சொருபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது) எனும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மா தான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும் பிராமண சாஸ்திர கிரந்தங்களையும் வேள்விகளையும் படைத்தது.ஆகையால் பரமாத்மாவின் பெயரைப் போற்றி வேள்வி முதலான பணிகளை தொடங்க வேண்டும்.
அர்ச்சுனன்: பகவானே! ஓம் என்ற பிரணவம் எங்கு பயன் படுத்தப்படுகிறது?
பகவான்: அர்ச்சுனா! வைத்தீக சித்தாத்தங்களை ( கோட்பாடுகளை) ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு சாஸ்திர விதிப்படி ஏற்படுத்தப்பட்ட வேள்வி, தானம்,தவம் எனும் பணிகளை ஓம் என்று உச்சரித்துத் தான் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதுதான் தொன்று தொட்ட வழக்கம்.
அர்ச்சுனன்: பகவானே! தத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
பகவான்:அர்ச்சுனா! தத் எனும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே உள்ளது.எல்லாம் அதற்கே உரிமையானவை என்கிற எண்ணம் நம்பிக்கையாக அமைய வேண்டும் .இந்த திட நம்பிக்கையுடன் உலக பந்தங்களிலிருந்து முத்தி பெற விரும்பும் மனிதர்கள் பயனைக் கருதாமல் வேள்வி முதலிய கடமைகளை செய்துவர வேண்டும்.
அர்ச்சுனன்: பகவானே! சத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
பகவான்:பார்த்தா!பரமாத்மாவின் சத் எனும் திருநாமம் எல்லா இருப்பிற்கும் ( நிலைப்பாடு)சிரேஷ்டமான தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.போற்றத் தகுந்தது.சிரேஷ்டமான செயலுடன் “சத்” எனும் சொல் சேர்க்கப்படுகிறது.வேள்வி, தவம், தானம் இவைகளில் மனிதனுக்கு நிலைகூட “சத்” எனப்படுகிறது.எவ்வளவுதான் சொல்கிறது? அந்த பராத்மாவிற்காக செய்யப்படும் செயல்கள் யாவுமே “சத்” என்ப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! சத் என்பதற்கு மாறான அசத் காரியங்கள் எவை?
பகவான்:பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வி கொடுக்கப்படும் தானம், அநுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்களை சத் எனப்படும்.அசத் காரியங்களுக்கான பலன் இப்பிறவியிலும் இறந்த பிறகும் கூட ஏற்படுவதில்லை .அதாவது அசத்துக்கு எங்குமே நல்ல பலன் ஏற்படுவதில்லை.



